'ஆயிரத்தில் ஒருவன் 2' எடுக்க வேண்டுமென்பது தனது தாராத ஆசை என இயக்குநர் செல்வராகவன் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நடிகர தனுஷின் சகோதரரும், இயக்குநருமான செல்வராகவன் தற்போது சூர்யா நடிக்கும் NGK திரைப்படத்தை இயக்கி வருகிறார். செல்வராகவன் இயக்கத்தில் உருவாகி வருமு NGK திரைப்படத்தை காட்டிலும், அவரது இயக்கத்தில் புதுப்பேட்டை-2, ஆயிரத்தில் ஒருவன்-2 திரைப்படங்கள் எப்போது வெளிவரும் என தான் ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.


இந்நிலையில் தற்போது இவ்விருபடங்கள் குறித்த அறிவிப்பு ஒன்றினை இயக்குநர் செல்வராகவும் தனது ட்விட்டர் பக்கத்தின் வாயிலாக தெரிவித்துள்ளார்.



சமீப காலமாக ட்விட்டரில் ஆக்டிவ்வாக செயல்பட்டுவரும் செல்வராகவனிடம், புதுப்பேட்டை படத்துக்காக காத்திருக்கிறோம் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர். அதற்கு பதிலளித்த அவர், "காலம் வரும். கண்டிப்பாக நடக்கும்" என்று குறிப்பிட்டு இருந்தார்.


இதைத்தொடர்ந்து 'ஆயிரத்தில் ஒருவன் 2' திரைப்படத்தின் மீதான தனது ஆர்வத்தினை குறித்தும் அவர் தனது ட்விட்டர் பதிவின் மூலம் தெரியப்படுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது...


"வெளியே எங்கு சென்றாலும் நண்பர்கள் ‘புதுப்பேட்டை  2 ‘எப்போது ? என்று அன்பாய் கேட்கின்றனர். நடக்கும் என சொல்வேன். ஆயின் என் மனதுக்குள் கேட்கும் தீரா ஓசை “ஆயிரத்தில் ஒருவன் 2 “ எடுக்க வேண்டும் என்பதுதான்.சோழன் பயணம் தொடர வேண்டும் என்பது என்னுள் புதைந்து கிடக்கும் நீண்ட நாள் தாகம்." என குறிப்பிட்டுள்ளார்.