இன்று (வியாழக்கிழமை) திண்டுக்கல்லில் நடைபெற்ற படப்பிடிப்பின் போது நடிகரும் இயக்குநருமான சேரனுக்கு தலையில் காயம் ஏற்பட்டது. "நந்தா பெரியசாமி" இயக்கும் தனது புதிய படமான "ஆனந்தம் விளையாடும் வீடு" படப்பிடிப்பில் நடிகர் சேரன் கலந்துக்கொண்டுள்ளார். இந்தப்படத்தில் திண்டுக்கல்லில் உள்ள ஒரு வீடு முக்கிய பாத்திரமாகவே இடம் பெற்றிப்பதாகவும், இங்குதான் காட்சிகள் படமாக்கப்பட்டதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த படப்பிடிப்பின் போது சேரன் தவறி விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தொலைக்காட்சி சேனல்களால் நீல சட்டை மற்றும் வெள்ளை வேஷ்டி அணிந்திருந்த சேரன், கால் இடறி கீழே விழுந்த காட்சி ஒளிபரப்பட்டது. இந்த படத்தில் கவுதம் கார்த்திக் நாயகனாக நடிக்கிறார்.


ALSO READ |  மருத்துவமனையில் இருக்கும் யாஷிகாவுக்கு நடிகை வனிதா அறிவுரை


அவரது தலையில் பலமாக அடிப்பட்டதை அடுத்து, எட்டு தையல்கள் போடப்பட்டது. இருப்பினும், சேரன் தனது மீதமுள்ள காட்சிகளின் படப்பிடிப்பை முடித்துக் கொடுத்தார். இந்த விபத்தை தொடர்ந்து படப்பிடிப்பு குழுவினர் சென்னை திரும்பியுள்ளனர்.


50 வயதான சேரன் நான்கு முறை தேசிய விருது பெற்ற நடிகர் மற்றும் இயக்குநர் ஆவார். இவர் இயக்கிய வெற்றிக் கொடி கட்டு (2000), ஆட்டோகிராப் (2004) மற்றும் தவமாய் தவமிருந்து (2005) போன்ற திரைப்படங்கள் தேசிய திரைப்பட விருதுகள் பெற்றுள்ளது. அவரது "ஆடும் கூத்து" என்ற படம் சிறந்த தமிழ் மொழிக்கான தேசிய விருதை பெற்றது. ஆனால் இந்தப்படம் திரையரங்குகளில் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 


ALSO READ |  விஷால் சேரனுக்கு அனுப்பிய எச்சரிக்கை கடிதம்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR