நேற்று விழித்திரு பிரஸ்மீட்டில் தன்ஷிகாவை டி.ராஜேந்தர் கடுமையாக சாடினார். இதனால் நடிகை தன்ஷிகா அழத்தொடங்கினார். ஆனாலும் டி.ராஜேந்தர் தொடர்ந்து தன்ஷிகாவை சாடினார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதனையடுத்து தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் விஷால் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அதைக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-


'விழித்திரு' பிரஸ்மீட்டில் டி.ராஜேந்தரின் பெயரை தன்ஷிகா கூற மறந்ததால், அவரை சாடி பேசினார். ஆனால் தன்ஷிகா மன்னிப்பு கேட்டபோதும் அந்த மன்னிப்பை ஏற்று கொள்ளாமல் தொடர்ந்து பேசியதற்கு பன்முக திறமை கொண்ட டி.ராஜேந்தர் அவர்களுக்கு கண்டனம் தெரிவித்து கொள்கிறேன். மேலும் சில விசியங்களை கூறியுள்ளார்.