நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மணி மண்டபம் திறப்பு விழாவில் ஒரே மேடையில் ஓபிஎஸ், அமைச்சர்களுடன் அமர்ந்தனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நடிகர் சிவாஜி கணேசன் நினைவாக, சென்னையில் கட்டப்பட்டுள்ள மணிமண்டபத்தை, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று திறந்து வைத்தார்.


தமிழக அரசு சார்பில், நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு சென்னை அடையாறு பகுதியில் மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.


சிவாஜியின் பிறந்த நாளான இன்று, இந்த மணிமண்டபம் திறக்கப்பட்டது. துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்று இதனைத் திறந்து வைத்தார்.


மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் நடந்த இவ்விழாவில், அமைச்சர் கடம்பூர் ராஜூ முன்னிலை வகித்தார். அமைச்சர்கள் மாபா பாண்டியராஜன், பெஞ்சமின் ஆகியோரும் கலந்துகொண்டனர். 


இந்த விழாவில் பங்கேற்ற நடிகர்கள் ரஜினி, கமலை துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் ஒரே மேடையில் அமர்ந்து இருந்தனர்.


மேலும் இதில் நடிகர்கள் சரத்குமார், நாசர், விஜயகுமார், கார்த்தி, விஷால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த விழாவுக்கு வந்த ரஜினியையும், கமல் ஹாசனையும் துணை முதல்வர் ஓபிஎஸ் வரவேற்றார்.