கோலிவுட் திரையுலகில் பல தமிழ் நடிகைகள் திருமணம் ஆகாமல் சிங்கிள் சிங்கங்களாக சுற்றி வருகின்றனர். அவர்கள் திருமணம் செய்து கொள்ளாததற்கு பல காரணங்கள் இருக்கின்றன. இவர்களை ரசிகர்கள் பலர், “ஏன் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை..” என்று கேட்டு நச்சரித்து வந்தாலும், இவர்கள் குறித்து திருமண வதந்தி எழுந்துவிட்டால் துடித்துடித்து போய் விடுகின்றனர். அப்படி அடிக்கடி திருமண வதந்திகள் எழும் நடிகைகள் யார்? இங்கே பார்க்கலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

த்ரிஷா:


த்ரிஷாவை திரையில் பார்க்கும் போதெல்லாம் ரசிகர்கள் முணுமுணுக்கும் ஒரே பாடல், “அவள் உலக அழகியே..” என்பதுதான். ஜோடி படத்தில் துணை கதாப்பாத்திரமாக நடித்து அறிமுகமான த்ரிஷா, மாடலிங் துறை மூலம் திரையுலகிற்கு வந்தார். இளமையாக இருந்த போது அழகியாக இருந்த த்ரிஷா, 40 வயதை கடந்தும் பேரழகியாக திரையுலகில் வலம் வருகிறார். தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களாக இருக்கும் அனைவருடனும் ஜோடி சேர்ந்து நடித்து விட்டார். தன்னை விட இளமையாக இருக்கும் நடிகர்களுக்கும் தற்போது ஜோடியாக நடித்து வருகிறார். கிட்டத்தட்ட 24 வருடங்களுக்கும் மேலாக தனது ரசிகர்களால் South Queen என்று அழைக்கப்படுகிறார். 


த்ரிஷாவும் பிரபல தெலுங்கு நடிகர் ராணா டகுபதியும் சில வருடங்களுக்கு முன்பு காதலிப்பதாக கூறப்பட்டது. நல்ல நண்பர்களாக இருந்த அவர்கள் காதலில் விழுந்ததாகவும் சில காரணங்களால் அந்த காதல் பிரிவில் முடிந்ததாகவும் சினிமா வட்டாரங்களில் கிசுகிசுக்கப்பட்டது. தற்போது ராணாவிற்கு திருமணம் ஆகி விட்டது. த்ரிஷாவிற்கு 2015ஆம் ஆண்டு வருண் என்ற தொழிலதிபருடன் நிச்சயதார்த்தம் நடந்தது. ஆனால், இதுவும் திருமணம் வரை செல்லவில்லை. சில நாட்களுக்கு முன்னர் த்ரிஷா ஒரு பிரபல மலையாள திரைப்பட தயாரிப்பாளரை திருமணம் செய்து கொள்ள உள்ளதாக வதந்திகள் பரவின. இதை மறுக்கும் வகையில் த்ரிஷாவே தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். 


அனுஷ்கா:


தமிழில், ‘ரெண்டு’ படம் மூலம் அறிமுகமானவர் அனுஷ்கா. தெலுங்கு மற்றும் தமிழ் மொழி திரையுலகில் முன்னணி நடிகைகளாக இருந்தர்களுள் இவரும் ஒருவர். அருந்ததி படத்தில் ஜக்கம்மாவாகவும், இஞ்சி இடுப்பழகி படத்தில் அசால்டாக உடல் பருமனாக இருக்கும் சாதாரண பெண்ணாகவும் நடித்து ரசிரக்களை அசத்தினார். இவர், பாகுபலி படத்தில் நடிகர் பிரபாஸ் உடன் இணைந்து நடித்திருந்தார். அந்த படப்பிடிப்பில் இருவருக்கும் காதல் மலர்ந்ததாக கூறப்படுகிறது. ஆனாலும், இரு தரப்பினரும் இதை மறுக்கவோ ஏற்கவோ இல்லை. பின்னர், இந்த காதல் முறிவில் முடிந்ததாக கூறப்படுகிறது. 


தற்போது அனுஷ்காவிற்கு 41 வயது ஆகிறது. இவர் நடிப்பில் மிஸ் ஷெட்டி மிஸ்டர் போலிஷெட்டி படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது அனுஷ்கா சிங்கிளாக தனது வாழ்க்கையை அனுபவித்து கொண்டிருக்கிறார். 


மேலும் படிக்க | Sai Pallavi: அடேங்கப்பா..மேக்-அப் போடாமலும் சாய் பல்லவி இத்தனை அழகா இருக்க இதுதான் காரணமா?



ஐஸ்வர்யா ராஜேஷ்:


இவரை ‘காக்கா முட்டை’ ஐஸ்வர்யா என்று கூறினால்தான் பலருக்கு பரீட்சியமாக இருக்கும். அட்டக்கத்தி படம் மூலம் அறிமுகமான இவர் தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் நாயகிகளுள் ஒருவராக இருக்கிறார். தமிழ் நாட்டிலேயே பிறந்து தமிழ் சினிமாவில் நடிக்கும் நடிகைகள் வெகு சிலரே உள்ளனர். அதில் இவரும் ஒருவர். ஐஸ்வர்யாவிற்கு தற்போது 33 வயதாகிறது. இவர் குறித்து காதல் கிசுகிசுக்களும் எழுவதில்லை. திருமண வதந்திகளும் எழுவதில்லை. சோலோவாக ஜாலியாக இருக்கும் நடிகைகளுள் இவரும் ஒருவர். 


இலியானா:


தமிழில் கேடி, நண்பன் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தவர் இலியானா. “இருக்கானா இடுப்பிருக்கானா..” என 10 வருடங்களுக்கு முன்னர் ரசிகர்கள் இவரது இடுப்பழகை ரசித்து வந்தனர். அதன் பிறகு பாலிவுட் பக்கம் சென்ற இவர், தென்னிந்திய திரையுலகின் பக்கம் வரவே இல்லை. காரணம், “தெலுங்கு சினிமா எடுப்பவர்களுக்கு நடிகைகள் கவர்ச்சியாக இருப்பதுதான் முக்கியம்..” என்று ஒரு நேர்காணலில் கூறிவிட்டார். அதிலிருந்து டோலிவுட் இயக்குநர்கள் இவரை ஓரம் கட்டி விட்டனர். 


இலியானாவிற்கு கடந்த ஆகஸ்டு மாதம் ஆண் குழந்தை பிறந்தது. இலியானா, பிரபல பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப்பின் சகோதரரை திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால், இது குறித்து அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் வெளியாகவில்லை. ரசிகர்களை பொருத்த வரை இவர் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல்தான் இருக்கிறார். 


சாய் பல்லவி:


தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழி படங்களில் நடித்து பிரபலமான நடிகை, சாய் பல்லவி. இவரை பார்ப்பவர்கள், “யப்பா, என்ன அழகுடா..” என்று கூறாமல் கடந்து செல்ல மாட்டார்கள். அக அழகும் முக அழகும் நிரம்பிய நடிகைகளுள் ஒருவர் இவர். சாய் பல்லவி, தற்போது சிவகார்த்திகேயனின் 21ஆவது படத்தில் நாயகியாக நடிக்கிறார். இதன் பூஜை விழா சமீபத்தில் நடந்தது. இதில், படக்குழுவினருக்கு மாலை அணிவிக்கப்பட்டு குழு புகைப்படம் எடுக்கப்பட்டது. அப்போது சாய் பல்லவி படத்தின் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி அருகில் நின்று கொண்டிருந்தார். இந்த புகைப்படத்தில் இருவரும் உள்ளதை மட்டும் வெட்டிய சில நெட்டிசன்கள் இவருவருக்கும் திருமணம் முடிந்து விட்டதாக கிளப்பி விட்டனர்.ரசிகர்களின் இந்த செயலால் அப்செட் ஆன சாய் பல்லவி, இதற்கு தனது ட்விட்டர் எக்ஸ் பக்கத்தில் கண்டனம் தெரிவித்திருந்தார்.


மேலும் படிக்க | த்ரிஷாவிற்கு விரைவில் திருமணமா..? அதிர்ச்சியில் ரசிகர்கள்..!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ