இந்து தீவிரவாதம் இல்லை என கூறி இந்து மதத்தைபற்றி தவறாகக் கூறியதாக கமல்ஹாசன் மீது உத்தரபிரதசத்தில் உள்ள பனாரஸ் போலீஸ் ஸ்டேஷனில் 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கமல்ஹாசன் பிரபல தமிழ் வர பத்திரிகையில் தொடர் கட்டுரை எழுதி வருகிறார். அந்த கட்டுரையில் ‘இந்து தீவிரவாதம் இல்லை’ என்று கூறமுடியாது என கமல்ஹாசன் கருத்து தெரிவித்திருந்தார். 


கமல்ஹாசன் கருத்துக்கு பல பாஜக கட்சி தலைவர்கள் மற்றும் சிவசேனா கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். 


இந்நிலையில் கமல்ஹாசன் இந்து மதத்தைபற்றி தவறாகக் கூறியதாக உத்தரபிரதசத்தில் உள்ள பனாரஸ் போலீஸ் ஸ்டேஷனில், ஐபிசி 500, 511, 298, 505 (சி), 295 (ஏ) ஆகிய 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.