இயக்குனர் ஹரி கதை, திரைக்கதை, வசனம் எழுதி, இயக்கியுள்ள திரைப்படம் ரத்தினம். இயக்குனர் ஹரி இயக்கி உள்ள 17 வது திரைப்படமான இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக நடிகர் சங்க தலைவர் விஷால் நடித்துள்ளார். கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார் மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் வருகிற 26 ஆம் தேதி தமிழக முழுவதும் திரையரங்குகளில் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இதை தொடர்ந்து தூத்துக்குடியில் உள்ள பாலகிருஷ்ணா திரையரங்கில் ரத்தினம் திரைப்படத்தின் பிரமோஷன் காட்சி வெளியிடப்பட்டது. இதில் இயக்குனர் ஹரி கலந்து கொண்டு திரையரங்கிற்க்கு வந்திருந்த பொதுமக்களுடன் அமர்ந்திருந்து பிரமோஷனை பார்த்து ரசிகர்களுடன் தனது கருத்தை பரிமாறிக் கொண்டார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | Guess Who: சிறு வயதில் செம க்யூட்டாக பிரபல திரை நட்சத்திரங்கள்! யாரென்று தெரிகிறதா?


அப்போது அவர் கூறுகையில் நடிகர் விஜய் நடித்த கில்லி திரைப்படத்தை 20 ஆண்டுகள் கழித்து பார்க்க இவ்வளவு ரசிகர்கள் திரையரங்கிற்கு வந்து படத்தை பார்க்க வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கக்கூடிய விசயமாக உள்ளது. தான் இயக்கி  வெளிவர உள்ள ரத்தினம் திரைப்படம் அனைத்து தரப்பு மக்களையும் கவரும் வகையில் சிறந்த பொழுதுபோக்கு அம்சங்களுடன் எடுக்கப்பட்ட படமாகும். எந்த விதமான முகம் சுளிக்கவைக்கும் காட்சிகள் படத்தில் இடம்பெறவில்லை, குடும்பத்துடன் அனைவரும் வந்து திரையரங்குகளில் இந்த படத்தை பார்த்து வெற்றி பெற வைக்க வேண்டுமென கேட்டுக் கொண்டார். இதனை அடுத்து செய்தியாளரிடம் இயக்குனர் ஹரி பேசுகையில், இது தனது 17வது படம் என்று தெரிவித்த அவர் இந்த படத்தின் கதை வேலூர் மற்றும் ஆந்திர மாநிலம் சித்தூர், தமிழகத்தில் திருத்தணி பகுதிகளை சுற்றி நடைபெற்ற கதைக்களமாகும். 


முதல் முறையாக வட மாவட்ட பகுதியை வைத்து தான் படம் எடுத்துள்ளதாகவும், இதற்கான படப்பிடிப்புகள் தூத்துக்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்றதாக தெரிவித்தார். இந்த திரைப்படம் நடிகர் விஷாலுக்கு மார்க் ஆண்டனி படத்திற்கு அடுத்ததாக ஒரு வெற்றி படமாக அமையும் என்றார். மேலும் பேசிய அவர் நடிகர் விஜய் மற்றும் விஷால் என அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். மக்களுக்கு நல்லது செய்தால் சந்தோசம் தானே என்றார். மேலும் தனது படங்களின் இரண்டாவது பாகம் தற்போது எடுக்கும் எண்ணமில்லை என்று கூறிய அவர் விரைவில் போலீஸ் கதை அம்சத்துடன் கூடிய ஒரு திரைப்படம் எடுக்க உள்ளதாக அவர் தெரிவித்தார். 


மேலும் ஓடிடி இணையதளங்களில் படங்கள் வெளியாவதால் சினிமாவிற்கு எந்த பாதிப்பும் கிடையாது.  திரையரங்குகள் தற்போது நல்ல நிலையில் உள்ளதால் பொதுமக்கள் திரையரங்கிற்கு வந்து பார்ப்பது எண்ணிக்கை கூடியுள்ளது. ஓடிடி உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளும் சினிமாவிற்கு கூடுதல் பலம் என்றார். மேலும் தற்போது வெளியாகியுள்ள நடிகர் விஜய்யின் கில்லி திரைப்படத்திற்கு 20 ஆண்டுகளுக்கு பின்பு திரையரங்கிற்கு வந்து ரசிகர்கள் வந்து உற்சாகமாக பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.


மேலும் படிக்க | ரீ-ரிலீஸிலும் மாஸ் காட்டும் விஜய்யின் ‘கில்லி’ திரைப்படம்! வசூல் எவ்வளவு தெரியுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ