மார்ச் 25 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படம் உலகம் முழுவதும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. வசூலிலும் இதுவரை இல்லாத அளவுக்கு வெளியிடப்பட்ட அனைத்து மொழிகளிலும் வாரிக் குவித்தது. லேட்டஸ்ட் தகவலின்படி, பாக்ஸ் ஆஃபீஸில் ஆயிரம் கோடி ரூபாயைக் ஆர்ஆர்ஆர் கடந்திருப்பதாக கூறப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | ஜிகர்தண்டா-2 படத்தின் ஹீரோ யார்? வெளியான தகவல்!


இதனால் உற்சாகத்தில் இருக்கும் ஆர்ஆர்ஆர் டீம், படத்தின் சக்ஸஸ் பிரஸ்மீட்டில் கலந்து கொண்டனர். இதில் பேசிய ஜூனியர் என்டிஆர், ஆர்ஆர்ஆர் படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க வேண்டும் எனக் கூறினார். அதனை இயக்குநர் ராஜமௌலி  செய்யாவிட்டால் அவரை ரசிகர்கள் விடமாட்டார்கள் எனத் தெரிவித்த அவர், படம் வெற்றிபெற்றது மிகப்பெரிய மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்தார். 



கொரோனா காரணமாக படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது வருத்தமாக இருந்ததாக தெரிவித்த ராம்சரண், படத்தின் வெற்றியால் அந்த வருத்தம் நீங்கியிருப்பதாக கூறியுள்ளார். இயக்குநர் ராஜமௌலி ஆர்ஆர்ஆர் 2 நினைத்தால் நாங்கள் அனைவரும் நிச்சயம் மகிழ்ச்சியடைவோம் என்றும் ராம்சரண் கூறினார். 



இதன்பிறகு பேசிய ராஜமௌலி, ஆர்ஆர்ஆர் படத்தின் சூட்டிங் விரைவாக முடிந்துவிட்டது. அப்படியொன்று நடந்தால் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆருடன் அதிக நேரம் செலவிடுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். இதைவிட மகிழ்ச்சி ஒன்று இருக்க முடியாது என ராஜமௌலி தெரிவித்தார். ஆனால், ஆர்ஆர்ஆர் 2 உருவாக்கத்துக்கு காலம் தான் பதில் சொல்லும் என்றும் ராஜமௌலி தெரிவித்துள்ளார். இந்த பிரஸ்மீட்டில் கரண் ஜோகர் உள்ளிட்ட நட்சத்திரங்களும் கலந்து கொண்டனர். 


மேலும் படிக்க | பீஸ்ட் படத்தில் பூஜா ஹெக்டே நடித்ததன் பின்னணி!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR