உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சசிகலாவின் கணவர் நடராஜன் (வயது-76), நேற்று (மார்ச் 20) நள்ளிரவு 1:35 மணிக்கு சென்னை குளோபல் மருத்துவமனையில் காலமானார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று, பெங்களூரு சிறையில் உள்ள, சசிகலாவின் கணவர் நடராஜன், கல்லீரல் மற்றும் சிறுநீரக செயலிழப்பால் பாதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு, 2017 அக்டோபரில் ஒரே நேரத்தில் கல்லீரல் மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடந்தது. இந்த சிகிச்சை முடிந்து நவம்பரில் வீடு திரும்பினார்.


இந்நிலையில், மார்பு பகுதியில் நோய்த்தொற்று ஏற்பட்டதால் மார்ச் 16-ல், சென்னை குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவகள் குழு தீவிர சிகிச்சை அளித்தும், நடஜரானின் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று (மார்ச் 20) நள்ளிரவு சரியாக 1:35 மணிக்கு நடராஜன் உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.


இதை தொடர்ந்து சொத்து குவிப்பு வழக்கின் காரணமாக பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம்  நடராஜனுக்கு உடல் நல குறைவு ஏற்பட்டு கல்லீரல் மற்றும் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட போது கணவனைக் காண பரோலில் வந்திருந்தார் சசிகலா.


பின்னர் நடராஜனுக்கு கடந்த 17-ம் தேதி இரவு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. அப்போது சசிகலா பரோலில் வருவார் என அனைவரும் எதிர்பார்த்தனர். இந்நிலையில், நடராஜன் திடீர் நெஞ்சுவலி காரணமாக நேற்று (மார்ச் 20) நள்ளிரவு 1.35 மணியளவில் அவர் மரணமடைந்தார். 


சசிகலா நடராஜனின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக பெங்களூரு சிறையில் உள்ள சசிகலா பரோலில் நேற்று மதியம் கார் மூலம் தஞ்சைக்கு வந்தடைந்தார். 


இந்நிலையில் இன்று இறுதி சடங்குகள் செய்யப்படும் என்று சசிகலா சகோதரர் திவாகரன் கூறினார். நடராஜனுக்கு சொந்தமான நிலம் விளாரில் உள்ளது. அங்குள்ள முள்ளிவாய்க்கால் முற்றம் அருகே நடராஜன் உடல் இன்று அடக்கம் செய்யப்பட உள்ளதாகவும் திவாகரன் கூறினார்.