இந்தியாவில் தொடர்ந்து பெட்ரோல் மற்றும் டீசலின் விலை உயர்ந்துக்கொண்டு வருகிறது. இன்று பெட்ரோலின் விலை டெல்லியில் ரூ. 73.95-ம், கொல்கத்தாவில் ரூ.76.66-ம், மும்பையில் ரூ. 81.80-ம், சென்னையில் ரூ. 76.72 என்று விற்க்கப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பெட்ரோல் மற்றும் டீசல் விலையின் உயர்வை திரும்ப பெற வேண்டும் என திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-


‘‘நான் கடுமையாக கண்டிக்கிறேன். தொடர்ந்து உயர்ந்து வரும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையினால் பொதுமக்களை மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த விலை உயர்வை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும். மேலும், பெட்ரோலிய பொருட்களை ஜிஎஸ்டி-யின் கீழ் கொண்டு வந்து பொது மக்களின் சுமையை மத்திய அரசு குறைக்க வேண்டும்’’ என அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.