மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் செய்தி: அகவிலைப்படியில் அதிரடி உயர்வு

Tue, 21 May 2024-2:58 pm,

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு பல நல்ல செய்திகள் காத்திருக்கின்றன. அரசாங்கம் விரைவில் ஊழியர்களுக்கான அகவிலைப்படியில் பெரிய ஏற்றத்தை அறிவிக்கும் என நம்பப்படுகின்றது. ஓய்வூதியதாரர்களின் அகவிலை நிவாரணமும் அதே அளவு அதிகரிக்கப்படும். இதை பற்றி இங்கே விவரமாக காணலாம். 

 நாட்டில் மக்களவைத் தேர்தல் பல கட்டங்களாக நடந்துகொண்டு இருக்கின்றது. தேர்தல் முடிவுகள் ஜூன் 4 ஆம் தேதி வரவுள்ள நிலையில், அதன் பிறகு புதிய அரசாங்கம் அமைக்கப்படும். புதிய அரசு அமைந்தவுடனேயே ஊழியர்களுக்கு பல நல்ல செய்திகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

அகவிலைப்படி உயர்வைத் தவிர, 8வது ஊதியக்கமிஷன் குறித்த நல்ல செய்தியும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நீண்ட நாட்களாக அடுத்த ஊதியக்குழுவிற்கான கோரிக்கை இருந்து வரும் நிலையில், தேர்தல் முடிவுகளுக்கு பிறகு இந்த பெரிய முடிவு எடுக்கப்படும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  எனினும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இன்னும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஜனவரி முதல் ஜூன் வரையிலான ஏஐசிபிஐ குறியீட்டு (AICPI Index) தரவுகளின் அடிப்படையில் அகவிலைப்படி குறைந்தபட்ச 4 சதவிகிதம் அதிகரிக்கும் என கூறப்படுகின்றது. இதன் அடிப்படையில், ஜூலை முதல் ஊழியர்களின் மொத்த அகவிலைப்படி (Dearness Allowance) மற்றும் ஓய்வூதியதாரர்களின் (Pensioners) அகவிலை நிவாரணம் 54% ஆக உயரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

உதாராணமாக, ஒரு மத்திய அரசு ஊழியரின் ஊதியம் ரூ.50 ஆயிரமாக இருந்தால், 4 சதவீத டிஏ உயர்வுக்குப் (DA Hike) பிறகு, மாதத்திற்கு சம்பளம் சுமார் ரூ.2000 அதிகரிக்கும். இதன்படி ஒவ்வொரு ஆண்டும் சம்பளம் ரூ.24,000 அதிகரிக்கும், இது ஊழியர்களுக்கு ஒரு மிகப்பெரிய பரிசாக இருக்கும். இதனால் சுமார் ஒரு கோடி குடும்பங்கள் பயனடைவார்கள். 

7வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளின் படி, அகவிலைப்படி 50% -ஐ எட்டியவுடன் அது பூஜ்ஜியமாக்கப்பட்டு, மொத்த அகவிலைப்படித் தொகை அடிப்படை ஊதியத்துடன் சேர்க்கப்படும். அதன் பின்னர் அகவிலைப்படி கணக்கீடு மீண்டும் பூஜ்ஜியத்திலிருந்து தொடங்கும். ஏஐசிபிஐ குறியீட்டு தரவுகளின் படி, அகவிலைப்படி உயர்வு 1%, 2% என கணக்கிடப்படும்.

மத்திய அரசு ஊழியர்களின் (Central Government Employees)அகவிலைப்படி ஒரு ஆண்டில் இரண்டு முறை, அதாவது ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அதிகரிக்கப்படுகின்றது. ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி கடந்த ஆண்டின் ஜூலை முதல் டிசம்பர் வரையிலான ஏஐசிபிஐ குறியீடுகளின் அடிப்படையிலும், ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி ஜனவரி முதல் ஜூலை மாதங்களுக்கான ஏஐசிபிஐ குறியீட்டு எண்களின் அடிப்படையிலும் கணக்கிடப்படுகின்றது. 

தேர்தல் முடிவுகள் வந்தவுடன், அகவிலைப்படி 4% அதிகரித்து மொத்த அகவிலைப்படி 54% ஆகுமா, அல்லது, அகவிலைபப்டி பூஜ்ஜியம் ஆக்கப்பட்டு புதிய கணக்கீடு தொடங்குமா, அல்லது 8வது ஊதியக்குழு பற்றிய அறிவிப்பை அரசு வெளியிடுமா என்பது பற்றி இன்னு தெளிவாகத் தெரியவில்லை. எனினும், எதுவாக இருந்தாலும்,. அது மத்திய அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தில் பெரும் ஏற்றத்தை ஏற்படுத்தும்.

பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் அகவிலைப்படி உயர்வு அல்லது அடுத்த ஊதியக்கமிஷனுக்கான எந்தவித உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கபப்டுகின்றது. 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link