மத்திய அரசு ஊழியர்களுக்கு டிஏ ஹைக் அப்டேட்: இன்று வருகிறது முக்கிய AICPI எண் அறிவிப்பு

Wed, 31 Jul 2024-9:12 am,

மத்திய அரசு ஊழியர்கள் 7வது ஊதியக் குழுவின் படி அவர்களது சம்பளம் குறித்த ஒரு முக்கியமான புதுப்பிப்பைப் பெறவுள்ளனர். ஜூலை 2024 -க்கான அகவிலைப்படி அதிகரிப்பு எவ்வளவு இருக்கும் என்பது இன்று தெளிவாகலம் என கூறப்படுகின்றது. இதை பற்றி இந்த பதிவில் காணலாம். 

ஜனவரி 2024 -இல் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலை நிவராணம் ஆகியவை 4% அதிகரிக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து தற்போது 50% டிஏ (DA) மற்றும் டிஆர் (DR) வழங்கப்பட்டு வருகின்றது.

 

வழக்கமாக ஒரு ஆண்டில் 2 முறை, அதாவது ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படி அதிகரிக்கப்படுகின்றது. ஜூலை 2024 -க்கான டிஏ ஹைக் பற்றிய அறிவிப்புக்காக மத்திய அரசு ஊழியர்கள் தற்போது காத்திருக்கிறார்கள். இந்த அறிவிப்பு ஆகஸ்ட் அல்லது செப்டம்பரில் வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

 

பொதுவாக 6 மாத ஏஐசிபிஐ குறியீட்டு (AICPI Index) எண்களின் அடிப்படையில் அகவிலைப்படி திருத்தப்படுகின்றது. ஜனவரி 2024 முதல் ஜூன் 2024 மாதங்களுக்கான ஏஐசிபிஐ குறியீட்டு எண்களின் அடிப்படையில் ஜூலை 2024 -க்கான டிஏ கணக்கிடப்படும். இதுவரை  மே மாதம் வரையிலான ஏஐசிபிஐ எண்கள் வந்துள்ளன. 

வழக்கமாக ஒவ்வொரு மாத இறுதி நாளிலும் முந்தைய மாதத்தின் தரவு வெளியிடப்படும். அந்த வகையில், இன்று ஜூன் மாதத்துக்கான தரவு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. பணவீக்கத்தின் தாக்கத்தை எதிர்கொள்ள மத்திய ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி (Dearness Allowance) அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டுடன் (AICPI) தொடர்புடையது. 12 மாதங்களில் தொகுக்கப்பட்ட தரவுகளுடன், ஒவ்வொரு மாதமும் தொழிலாளர் பணியகத்தால் AICPI வெளியிடப்படுகின்றது. 

நுகர்வோர் விலைக் குறியீட்டின் (CPI) மாதாந்திர வெளியீடுகளின் அடிப்படையில், அடுத்த ஆறு மாதங்களுக்கான அகவிலைப்படி மாற்றங்கள் தீர்மானிக்கின்றன. அகவிலைப்படி AICPI இல் உள்ள ஏற்ற இறக்கங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள மத்திய பணியாளர்களுக்கு பொருளாதார மாற்றங்களுக்கு ஏற்ப நிதி வசதி கிடைப்பதை இது உறுதி செய்கிறது.

அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி என்பது சம்பளத்தில் இன்றியமையாத ஒரு பகுதியாக உள்ளது. தினம் தினம் அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவு, விலைவாசி, பணவீக்கம் ஆகியவற்றை சமாளிக்க அவர்களுக்கு உதவ இது அளிக்கப்படுகின்றது. இது அரசாங்க ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் டேக் ஹோம் சேலரி, அதாவது கையில் கிடைக்கும் ஊதியத்தை திறம்பட உயர்த்துகிறது.

மே மாதம் வரை வந்துள்ள ஏஐசிபிஐ தரவுகள், உயர் பணவீக்கத்திற்கான சாத்தியக்கூறுகள் ஆகியவற்றை வைத்து பார்க்கும்போது, ஜூலை 2024 -இல் அகவிலைப்படி 4% அல்லது 5% அதிகரித்து 54% அல்லது 55% ஆக உயரக்கூடும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனினும், இன்று ஜூன் மாத ஏஐசிபிஐ எண்கள் வந்தவுடன்தான் இது தெளிவாகும் என்பது குறிப்பிடத்தக்கது. அகவிலைப்படியில் இந்த உயர்வு ஏற்பட்டால், ஊழியர்களுக்கு மிகப்பெரிய ஊதிய உயர்வு கிடைக்கும்.

பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் அகவிலைப்படி உயர்வுக்கான எந்தவித உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கபப்டுகின்றது.  

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link