இந்த தேதியில் டிஏ ஹைக்: அரசு ஊழியர்களுக்கு அசத்தல் ஊதிய உயர்வு.... 8வது ஊதியக்குழு எப்போது?

Thu, 05 Sep 2024-9:21 am,

நீங்கள் ஒரு மத்திய அரசு ஊழியரா? உங்கள் வீட்டில் மத்திய அரசு ஊழியர்கள் இருக்கிறார்களா? அப்படியென்றால் இந்த செய்தி உங்களுக்கு மிக உதவியாக இருக்கும். இந்த செப்டம்பர் மாதத்தில் உங்களுக்கு பல நல்ல செய்திகள் காத்திருக்கின்றன. அவற்றை பற்றி இந்த செய்தியில் காணலாம். 

தற்போது, ​​நாட்டில் பணவீக்க விகிதம் வேகமாக அதிகரித்து வருகிறது. இதன் நேரடி தாக்கம் மத்திய ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் மீது உள்ளது. இதன் காரணமாக தங்கள் அகவிலைப்படி உயர்வுக்கான அதிகரிப்பை விரைவில் வெளியிட வேண்டும் என அவர்கள் அரசிடம் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார்கள். 

ஜூலை 2024 -க்கான அகவிலைப்படி அதிகரிப்பை இந்த மாதம் மத்திய அரசு அறிவிக்கும் என தெரிகிறது. இதைப் பற்றி அரசாங்கம் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. ஆனால், இதற்கான அறிவுப்பு எப்போது வேண்டுமானாலும் வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஜூலை 2024 -க்கான டிஏ உயர்வு (DA Hike) 3% முதல் 4% வரை இருக்கக்கூடும் என கூறப்படுகின்றது. முன்னதாக ஜனவரி 2024 -இல் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலை நிவாரணம் (Dearness Allowance) 4% அதிகரிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மொத்த டிஏ (DA) டிஆர் (DR) 50% ஆக உயர்ந்தன.

தற்போது ஜூன் 2024 முதல் அகவிலைப்படி 3% உயர்த்தப்பட்டால் மத்திய அரசு ஊழியர்களின் மொத்த அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலை நிவாரணம் 53% ஆகவும், 4% உயர்த்தப்பட்டால்  மத்திய அரசு ஊழியர்களின் மொத்த அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலை நிவாரணம் 54% ஆகவும் ஏற்றம் காணும். இதனால் ஊழியர்களுக்கு மிகப்பெரிய சம்பள உயர்வு இருக்கும்.

அகவிலைப்படி உயர்வு மத்திய ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியதாரர்களின் (Pensioners) ஓய்வூதியத் தொகையில் நேரடிப் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இது 6 மாதங்களுக்கு ஒரு முறை திருத்தப்படுவதால், இதனால் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நிதி நெருக்கடியில் பெரிய நிவாரணத்தை காண்கிறார்கள். 

கடந்த சில ஆண்டுகளில் 6 மாதங்களுக்கு ஒரு முறை அகவிலைப்படியில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை பற்றி இங்கே காணலாம். 1 ஜனவரி 2024 – 50%, 1 ஜூலை 2023 – 46%, 1 ஜனவரி 2023 – 42%, 1 ஜூலை 2022 – 38%, 1 ஜனவரி 2022 – 34%, 1 ஜூலை 2021 – 31%, 1 ஜூலை 2019 – 17%, 1 ஜனவரி 2019 – 12%. அதாவது, கடந்த சுமார் 4 தவணைகளாக அகவிலைப்படி 4% அதிகரித்துள்ளது.

8வது ஊதியக் குழு எப்போது அமைக்கப்படும் என மத்திய அரசு ஊழியர்கள் நீண்ட நாட்களாக காத்திருக்கிறார்கள். அரசு இன்னும் இதைப் பற்றி எதையும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை. 8வது ஊதியக்குழு அமலுக்கு வந்தால், அதன் பின்னர் ஊழியர்களின் ஊதியத்தில் மிகப்பெரிய ஏற்றம் இருக்கும். 

டிஏ ஹைக் எப்போது அறிவிக்கப்படும்? அகவிலைப்படி அதிகரிப்பு பற்றிய அறிவிப்பை மத்திய அரசு செப்டம்பர் இரண்டாவது வாரம் அல்லது மூன்றாவது வாரத்தில் வெளியிடக்கூடும் என கூறப்படுகின்றது. ஒரு சாரார் அகவிலைப்பை 3 சதவீதம் அதிகரிக்கும் என்றும் சிலர் இது 4 சதவீத ஏற்றத்தைக் காணும் என்றும் தெரிவிக்கின்றனர். 

ஜூலை 2024-க்கான அகவிலைப்படி அதிகரிப்பு பற்றிய அறிவிப்பு செப்டம்பர் மாதத்தில் வந்தாலும், ஜூலை முதல் ஊழியர்கள் டிஏ உயர்வுக்கான டிஏ அரியர் தொகையை பெறுவார்கள். இதனால் செப்டம்பர் மாத சம்பளத்தில் பம்பர் ஏற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் அகவிலைப்படி உயர்வுக்கான எந்தவித உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கபப்டுகின்றது. 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link