மத்திய அரசு ஊழியர்களுக்கு டிஏ ஹைக்: யாருக்கு எவ்வளவு ஊதிய உயர்வு? கணக்கீடு இதோ

Tue, 17 Sep 2024-9:34 am,

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்திற்கு (UPPS) பிறகு, இப்போது ஊழியர்கள் மற்றொரு நன்மையைப் பெறப் போகிறார்கள். மத்திய அரசு ஊழியர்களுக்கு கிடைக்கவுள்ள நன்மை என்ன? இது குறித்து இந்த பதிவில் காணலாம். 

இந்த ஆண்டு நவராத்திரிக்கு முன்னதாக, ஜூலை 2024 -க்கான டிஏ உயர்வு அறிவிப்பு வந்துவிடும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் இதற்காக நீண்ட நாட்களாக காத்திருக்கிறார்கள். இதற்கான ஆயத்தப் பணிகளை நிதித் துறை தொடங்கியுள்ளது. விரைவில் அமைச்சரவைக் கூட்டத்தில் இது முன்மொழியப்படும். இந்த உயர்வு 7வது ஊதியக் குழுவின் கீழ் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரண (Dearness Allowwance) விகிதங்கள் ஜூலை 2024 முதல் அமலுக்கு வரும். இதன் காரணமாக ஊழியர்கள் அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணத்தின் ஜூலை முதலான நிலுவைத் தொகையையும் பெறுவார்கள். இது தவிர, சம்பளத்துடன் ஓய்வூதியத்திலும் குறிப்பிடத்தக்க அதிகரிப்பும் இருக்கும்.

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி (DA) மற்றும் அகவிலை நிவாரண (DR) விகிதங்கள் ஆண்டுக்கு இரண்டு முறை மாற்றப்படுகின்றன. இந்த மாற்றம் பணியாளர் அமைச்சகத்தால் வெளியிடப்படும் ஏஐசிபியை குறியீட்டு (AICPI Index) விகிதங்களின் அடிப்படையில் செய்யப்படுகின்றது. 

அகவிலைப்படி ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் டிஏ திருத்தப்படுகின்றது. ஜனவரி 2024 -க்கான அகவிலைப்படி உயர்வு 4% ஆக இருந்தது. இதன் பின்னர் ஊழியர்களின் அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களின் (Pensioners) அகவிலை நிவாரணம் 50% ஆக உயர்ந்தன. இப்போது அனைவரும் ஜூலை 2024 இல் நடைபெறும் அடுத்த டிஏ உயர்வுக்காக காத்திருக்கிறார்கள்.

இந்த முறை அகவிலைப்படி 3-4% அதிகரிக்கப்படும் என கூறப்படுகின்றது. அகவிலைப்படி 3% அதிகரிக்கப்பட்டால் மொத்த அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் 53% ஆக அதிகரிக்கும். இது 4% அதிகரித்தால், மொத்த அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் 54% ஆக அதிகரிக்கும்.

சம்பள உயர்வு: சில உதாரணங்களின் மூலம் இதை புரிந்துகொள்ளலாம். ஒரு ஊழியரின் அடிப்படை சம்பளம் ரூ.55,200 என வைத்துக்கொண்டால், அவருக்கு இப்போது ரூ.27,600 அகவிலைப்படி கிடைக்கும். டிஏ 53 சதவீதத்தை எட்டினால், ​​அவருக்கு அகவிலைப்படியாக ரூ.29,256 கிடைக்கும். ஒரு ஊழியரின் அடிப்படை சம்பளம் ரூ.30,000 எனில், அவருக்கு இப்போது ரூ.15,000 அகவிலைப்படி கிடைக்கும். டிஏ 53 சதவீதமாக இருந்தால், அவருக்கு அகவிலைப்படியாக ரூ.16,900 கிடைக்கும்.

சம்பள உயர்வு கணக்கீடு: ஒரு ஊழியரின் அடிப்படை சம்பளம் (Basic Salary) ரூ.55,200 எனில், அவருக்கு ரூ.27,600 அகவிலைப்படி கிடைக்கும். அகவிலைப்படி 53 சதவீதத்தை எட்டும்போது, ​​அவருக்கு ரூ.29,256 அகவிலைப்படி கிடைக்கும். ஒருவருக்கு அடிப்படை சம்பளம் 52,000 ரூபாய் என்றால், 54 சதவிகித அகவிலைப்படியின்படி, அவருக்கு ஒவ்வொரு மாதமும் 2,080 ரூபாய் லாபம் கிடைக்கும், இது ஆண்டுக்கு 28,080 ரூபாயாக இருக்கும்.

ஓய்வூதியதாரர்களின் மாத ஓய்வூதியத்திலும் நல்ல ஏற்றம் இருக்கும். ஓய்வூதியம் பெறுபவரின் அடிப்படை ஓய்வூதியம் ரூ.25,000 எனில், அவருக்கு 50 சதவீதத்தின்படி ரூ.12,500 அகவிலைப்படி வழங்கப்படும். அகவிலைப்படி 53% ஆக அதிகரித்தால், அவருக்கு ரூ.13,250 கிடைக்கும். 

நாளுக்கு நாள் அதிகரிக்கும் விலைவாசி மற்றும் பணவீக்கத்தை கட்டுப்படுத்த மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி அளிக்கபடுகின்றது. இது ஊழியர்களின் ஊதிய கட்டமைப்பில் ஒரு முக்கிய அம்சமாக பார்க்கபடுகின்றது. 

டிஏ உயர்வு சூத்திரம்: அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி பின்வருமாறு கணக்கிடப்படுகிறது: DA% = [(கடந்த 12 மாதங்களின் AICPI இன் சராசரி (அடிப்படை ஆண்டு 2001 = 100) – 115.76)/115.76] x 100. பொதுத்துறை ஊழியர்களுக்கான DA பின்வருமாறு கணக்கிடப்படுகிறது: DA% = [(கடந்த 3 மாதங்களின் AICPI இன் சராசரி (அடிப்படை ஆண்டு 2001 = 100) – 126.33)/126.33] x 100

பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் அகவிலைப்படி உயர்வுக்கான எந்தவித உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கபப்டுகின்றது. 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link