விங் கமாண்டர் அபிநந்தனை வரவேற்ற மக்கள் கூட்டம்: புகைப்படங்கள்

Fri, 01 Mar 2019-5:31 pm,

நமது விமானப்படைச் சேர்ந்த 35 வயதான விங் கமாண்டர் அபிநந்தனை நல்லெண்ண அடிப்படையில் எவ்வித நிபந்தனையுமின்றி விடுவிப்பதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நேற்று தெரிவித்தார். 

இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் இன்று காலை பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் இருந்து விமானம் மூலம் லாகூர் அழைத்துவரப்பட்டார். லாகூர் வந்த பின்னர் கார் மூலமாக வாகா எல்லைக்கு கொண்டுவரப்பட்டார்.

இவரை வரவேற்க்க வாக எல்லையில் பிரமாண்டா நிகழ்ச்சிக்கள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அவரை வரவேற்க்க நாடு முழுவதும் உள்ள மக்கள் தயாராக உள்ளனர். இந்தியா - பாகிஸ்தான் வாகா எல்லையில் ஏராளமானோர் குவிந்துள்ளனர்.

ஜம்மு- காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் கடந்த 14- ஆம் தேதி நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் கடந்த பிப்ரவரி 26 ஆம் தேதி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் செயல்பட்டு வந்த பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது இந்திய விமானப் படை அதிரடி தாக்குதல் நடத்தியது. 

இந்தியாவின் வான் எல்லையில் பறந்த பாகிஸ்தான் விமானம் எப்16 விமானத்தை துரத்தி இந்திய மிக் 21 ரக விமானங்கள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் புகுந்து பாகிஸ்தான் விமானத்தை விழ்த்தியது. திரும்பும் வழியில் விமானத்தில் ஏற்ப்பட்ட விபத்தால் அந்த விமானத்தில் இருந்த அபிநந்தனின் பாகிஸ்தானால் கைது செய்யப்பட்டார்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link