மகனின் புகைப்படத்தை வெளியிட்ட சிவகார்த்திகேயன்! வைரல் போட்டோஸ்..

Fri, 12 Jul 2024-11:38 am,

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக வலம் வரும் சிவகார்த்திகேயன், தற்போது அமரன் படத்தை முடித்துவிட்டு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் பிசியாக இருக்கிறார்.

பேச்சுத்திறமை, நடிப்பு திறமை, விடாமுயற்சி நிறைந்த சிவகார்த்திகேயன் தொகுப்பாளராக சின்னத்திரையில் அறிமுகமானவர். இவர் தொகுத்து வழங்கிய அது இது எது, ஜோடி நம்பர் 1, சூப்பர் சிங்கர் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் பெரிய ஹிட் அடித்திருக்கின்றன.

திரையுலகிற்கு நுழைவதற்கு முன்னரே சிவகார்த்திகேயனுக்கு திருமணம் ஆகிவிட்டது. தனது உறவினர் பெண்ணான ஆர்த்தி என்பவரை 2010ஆம் ஆண்டில் இவர் திருமணம் செய்து கொண்டார். 

ஆர்த்தி-சிவகார்த்திகேயன் தம்பதியினருக்கு முதலில் ஆராதனா என்ற பெண் குழந்தை முதலில் பிறந்தது. இதையடுத்து, இவர்களுக்கு குகன் என்று இரண்டாவதாக ஆண் குழந்தையும் பிறந்தது. 

சினிமா, நடிப்பு என ஒரு பக்கம் பிசியாக இருந்தாலும் தனது குடும்பத்தினருக்கும் நேரம் கொடுக்க தவறமாட்டார் சிவகார்த்திகேயன். எங்கு சென்றாலும் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் செல்வார்.

சிவகார்த்திகேயன்-ஆர்த்தி தம்பதியினருக்கு கடந்த ஜூன் மாதம் 2ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்தது. இதனை அவரே சமூக வலைதளங்களில் அறிவித்திருந்தார்.

சிவகார்த்திகேயனின் இரண்டாவது மகனான குகனுக்கு இன்று (ஜூலை 12ஆம் தேதி) பிறந்தநாள். இந்த நாளில் தன் மகனை வாழ்த்தி ஒரு புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார். 

குகனுக்கு முத்தம் கொடுப்பது போல சிவகார்த்திகேயன் வெளியிட்டிருக்கும் இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link