தயிரை இந்த முறையில் முகத்திற்கு தடவினால் நல்ல பொலிவு கிடைக்கும்!

Sun, 16 Jun 2024-7:36 pm,

மோசமான உணவு மற்றும் வாழ்க்கை முறை உடல் நலத்தை மட்டும் இல்லாமல் சருமத்திலும் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. கடைகளில் பல சரும கிரீம்கள் இருந்தாலும் அவை பெரிதாக பலனளிப்பதில்லை.

 

ஒருபுறம் இவை அதிக விலையில் விற்கப்படுகின்றன, மறுபுறம் சிலருக்கும் தோல் அலர்ஜி போன்ற போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. இது போன்ற சூழ்நிலையில் முகத்தில் தயிர் தடவினால் நல்ல பொலிவு கிடைக்கும்.

 

செலிபிரெட்டி போல முகம் பிரகாசம் அடைய, முக கறைகளை நீக்க, வயதான தோற்றத்தை போக்க எளிய வீட்டு வைத்தியம் எப்போதும் பயனுள்ளதாக இருக்கும். பே இலைகள் மற்றும் தயிர் மூலம் பளபளப்பான சருமத்தை பெறலாம். 

 

பே இலை தூள், தயிர், மஞ்சள்தூள், தேன் ஆகியவற்றை கொண்டு நல்ல ஒரு பேஸ் பேக் தயார் செய்யவும். முகத்தை நன்கு கழுவிவிட்டு இந்த பேக்கை உங்கள் முகம் மற்றும் கழுத்தில் நன்றாக தடவவும்.

 

நன்கு காய்ந்த பிறகு நீரில் முகத்தை கழுவவும். வாரம் ஒருமுறை அல்லது இரண்டு முறை இவ்வாறு தடவி வந்தால் முகம் பிரகாசமாக இருக்கும். 

 

முக பளபளப்பு மட்டும் இன்றி பருக்கள், முகப்பரு, வெயிலின் தாக்கம் ஆகியவற்றில் இருந்தும் இந்த பேஸ் பேக் பாதுகாக்கிறது. இந்த பேக்கைப் பயன்படுத்துவதன் மூலம் சருமம் ஈரப்பதமாகிறது, இது வறட்சியையும் நீக்குகிறது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link