செம்பு பாட்டிலில் தண்ணீர் குடிப்பவரா நீங்கள்? இந்த பாதிப்புகள் ஏற்படும்!

Sat, 31 Aug 2024-8:16 pm,

செப்பு பாட்டில்களில் தண்ணீர் குடிப்பது ஆரோக்கியமான ஒன்றாக பலர் நினைக்கின்றனர். இதில் தண்ணீர் குடித்து வந்தால் செரிமானம், நோய் எதிர்ப்பு சக்தி போன்ற நன்மை கிடைப்பதாக கூறப்படுகிறது.

 

தாமிரம் பல்வேறு உடல் செயல்பாடுகளுக்கு தேவையான ஒரு கனிமமாகும். இது உடலில் இரத்த சிவப்பணுக்களை உருவாக்க உதவுகிறது, முக்கியமாக நரம்பு செல்களை பராமரிக்க உதவுகிறது. 

 

இருப்பினும் சாதாரண பாட்டில்களில் இருந்து செப்பு பாட்டில்களுடன் மாறுவதற்கு முன்பு அதனால் ஏற்படும் உடல்நல அபாயங்களை கருத்தில் கொள்வது அவசியம். நமது உடலுக்கு தாமிரம் தேவை என்றாலும், அதிகம் சேர்ப்பது உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.

 

செப்பு பாத்திரத்தில் சூடான தண்ணீரை அல்லது எலுமிச்சை நீரை ஒருபோதும் சேர்த்து குடிக்க கூடாது. இது வயிற்று பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். மேலும், செப்பு பாட்டில் வாங்கும் முன்பு நல்ல கடைகளை மற்றும் தரமான நிறுவனத்தை தேர்வு செய்து வாங்குவது நல்லது. 

 

தாமிரம் ஒரு கன உலோகம் ஆகும். இவை அதிகமாக உடலில் சேரும் போது கடுமையான குமட்டல், வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற குடல் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். 

 

உடலுக்கு தீங்கு ஏற்படுவதை தடுக்க இவற்றை சரியான முறையில் சுத்தம் செய்ய வேண்டியது அவசியம். சுத்தம் செய்யப்படாதபோது, ​​தாமிரம் அமில பானங்களுடன் வினைபுரியலாம். இதனால் மாசு ஏற்பட்டு உடலில் நோய் பாதிப்புகளை ஏற்படுத்தும்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link