ஏசியில் நீண்ட நேரம் தூங்குபவரா நீங்கள்? இந்த பாதிப்புகள் வரும்!

Tue, 30 Jul 2024-7:47 pm,

ஏசியில் நீண்ட நேரம் தூங்குவது உடல்நலத்திற்கு தீங்கு ஏற்படுத்துவது மட்டும் இல்லாமல், சருமத்திலும் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி இருக்கும். 

 

ஏசியில் தூங்குவது சருமம் மற்றும் கண்களில் வறட்சியை ஏற்படுத்தும். ஏசியில் நீண்ட நேரம் தூங்குவது சருமத்தில் உள்ள ஈரப்பதத்தை அகற்றி பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

 

இரவு முழுவதும் ஏசியில் தூங்கினால் சுவாசக் கோளாறு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது. ஆஸ்துமா அல்லது ஒவ்வாமை பிரச்சனை உள்ளவர்களுக்கு அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும். 

 

ஏசியில் இருந்து வரும் குளிர்ந்த காற்று சுவாச மண்டலத்தில் ஒருவித எரிச்சலை ஏற்படுத்தும். மேலும் இருமல், மூச்சுத்திணறல்,சுவாசிப்பதில் சிரமம் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

 

ஏசியில் தூங்குவது தூக்க முறையில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வரும். தூக்கத்தை சீர்குலைத்து மோசமான தூக்கத்திற்கு வழிவகுக்கும்.

 

ஏசியில் தூங்கும் போது நிலையான தூக்கம் கிடைக்கப்பதில்லை. தூங்கும் போது அசௌகரியம் மற்றும் அடிக்கடி விழிப்புணர்வை ஏற்பட கூடும். ஆழ்ந்த தூக்கம் கிடைப்பது சிரமம் ஆகும்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link