இன்று தமிழகம் முழுக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு! ஏன் தெரியுமா?

Wed, 06 Dec 2023-12:06 pm,

டிசம்பர் 6, 1992ல் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. மகாத்மா காந்தியின் படுகொலைக்குப் பிறகு இந்தியா சந்தித்த மிகப் பெரிய சோகம் என்று கூறப்படுகிறது.

 

அரசியலமைப்பு மீது நம்பிக்கை வைத்திருந்த இந்திய முஸ்லிம்களின் மனதில் இந்த நிகழ்வு ஆழமான காயங்களை ஏற்படுத்தியுள்ளது.

 

இதன் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 6ஆம் தேதி பாபர் மசூதி இடிப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது. 

 

இதனால் தமிழகம் முழுவதும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கோவை மாவட்டத்தில் 2000 போலீசார் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். 

 

பேருந்து நிலையங்கள், ரயில்வே, வழிபாட்டுத் தலங்கள், மார்க்கெட் போன்ற மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link