ஏழரை சனியிலிருந்து விடுதலை: சனிப்பெயர்ச்சியால் இந்த ராசிகளுக்கு தலைவிதி மாறும், சோதனைகள் தீரும்

Mon, 16 Jan 2023-6:14 pm,

பொதுவாக அனைத்து கிரகங்களின் ராசி மாற்றங்களும் அனைத்து ராசிகளிலும் தாக்கங்களை ஏற்படுத்துகின்றன. சனி பகவானின் ராசி மாற்றத்தால் ஏற்படும் தாக்கம் சற்று அதிகமாக இருக்கும். 

நாளை, ஜனவரி 17 அன்று நடக்கவுள்ள சனிப்பெயர்ச்சிக்கு பிறகு, ஏழரை நாட்டு சனியிலிருந்து நிவாரணம் பெற்று பல வித நல்ல பலன்களை பெறவுள்ள ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

தனுசு ராசிக்காரர்களுக்கு ஏழரை நாட்டு சனியின் தாக்கத்திலிருந்து விடுதலை கிடைக்கும். இதுவரை இருந்துவந்த துன்பங்கள் தீரும். பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். மன உளைச்சல், நோய்கள் நீங்கும். அதிர்ஷ்டம் உங்களுடன் இருக்கும்.

கும்ப ராசியில் சனி சஞ்சரிப்பதால் மிதுன ராசியில் சனி தசையின் தாக்கம் முடிவுக்கு வரும். மன அழுத்தத்தில் இருந்து விடுபடுவார்கள். தொழிலில் நல்ல காலம் தொடங்கும்.

துலாம் ராசிக்காரர்களுக்கு ஏழரை நாட்டு சனியிலிருந்து விடுதலை கிடைக்கும். இத்தனை நாட்களாக தடைபட்டிருந்த பணி இப்போது தொடங்கும். மன அழுத்தம் குறைவாக இருக்கும். மன மகிழ்ச்சியும் அமைதியும் கிடைக்கும். பணம் மற்றும் தொழில் துறையில் வெற்றி பெறுவீர்கள்.

கும்ப ராசியில் சனி பெயர்ச்சியானவுடன், கடகம் மற்றும் விருச்சிக ராசிக்காரர்களுக்கு புத்தாண்டில் சனி தசை தொடங்கும். அதன் தாக்கத்தால் மன, பொருளாதார மற்றும் உடல் ரீதியான பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரலாம். 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link