கிராம்பு நீரை குடிப்பதால்... உங்களுக்கு கிடைக்கும் 5 நன்மைகள் - இதயம் முதல் கல்லீரல் வரை!

Tue, 22 Oct 2024-8:40 pm,

கிராம்பு நீரை நீங்களை வீட்டிலேயே தயாரிக்கலாம். சிறிதளவு கிராம்பை எடுத்துக்கொண்டு அதை நீரில் 15-20 நிமிடங்களுக்கு கொதிக்கவைத்து அதனை வடிகட்டி சூடு ஆறவைத்து குடிக்க வேண்டும். 

 

இந்த கிராம்பு நீரை குடிப்பதன் மூலம் உடலில் ஏற்படும் 5 நன்மைகள் இங்கு காணலாம். 

 

செரிமான சிக்கல் தீரும்: கிராம்பு நீர் செரிமான பிரச்னைக்கு இயற்கையான நிவாரணமாகும். வயிற்றில் உப்புசம், வாயு தொல்லை, வயிற்று வலி போன்றவற்றுக்கு நிவாரணம் அளிக்கும். செரிமான சிக்கல் இருந்தால் இதனை உடனடியாக எடுத்துக்கொள்ளலாம். 

 

இதய ஆரோக்கியம்: கிராம்பு நீரில் தேவையான ஊட்டச்சத்துகள் மற்றும் ஆண்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்திருக்கின்றன. இது இதய ஆரோக்கியத்திற்கு நன்மை விளைவிக்கும். கிராம்புகளில் இருக்கும் ஆண்டிஆக்ஸிடன்ட்கள் அசுத்தங்களை ரத்தத்தில் இருந்து எடுத்து, இதய நோய் ஆபத்தை குறைக்கும். 

 

கல்லீரல் ஆரோக்கியம்: கிராம்பு நீர் என்பது கல்லீரலை சிறப்பாக செயலாற்ற உதவும். கிராம்புகளில் காணப்படும் யூஜெனால் என்பது கல்லீரல் அலர்ஜி மற்றும் ஃபேட்டி லிவர் நோயின் அறிகுறிகளை குறைக்கவும் உதவும்.

 

கிராம்பு அவற்றின் அலர்ஜி எதிர்ப்பு பண்புகளுக்கு அறியப்பட்ட பல மூலக்கூறுகளை கொண்டுள்ளது. இது உங்கள் உடலின் அலர்ஜி எதிர்வினையை குறைப்பதாக காட்டப்பட்டுள்ளது. இது கீல்வாதம் போன்ற உடல்நலப் பிரச்சினைகளின் அபாயத்தைக் குறைக்கும். 

 

கிராம்பு நீரில் உள்ள அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் உடலின் பாதுகாப்பை வழங்குவதோடு நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது. ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அலர்ஜியை குறைக்கின்றன. தொற்றுகள், நோய்களுக்கு உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகின்றன.

 

பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் பொதுவான தகவல்களை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டது. இதனை பின்பற்றும் முன் மருத்துவ ஆலோசனையை பெற வேண்டும். இதற்கு ஜீ நியூஸ் (Zee Tamil News) பொறுப்பு ஏற்காது. 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link