சென்னை மட்டும் இல்லை! இனி கோவையிலும் ஐபிஎல் போட்டிகள் நடக்கும்!

Sun, 11 Aug 2024-3:47 pm,

தமிழக அரசு கோவையில் புதிய சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க திட்டமிட்டுள்ளது. இந்த மைதானம் இந்தியாவிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

 

கடந்த ஏப்ரல் மாதம் இந்த புதிய கிரிக்கெட் மைதானம் தொடர்பான அறிவிப்பை முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார். சமீபத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், கோவை சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்திற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பிற்கான டெண்டர்களை அழைத்துள்ளது. 

 

கோவையில் இருந்து 16 கிலோமீட்டர் தொலைவில் சேலம், கொச்சி பகுதிகளை இணைக்கும் பகுதியில் மைதானம் அமைய உள்ளது. இதற்காக அந்த பகுதியில் உள்ள அரசு நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு வருகிறது.

 

தற்போது இந்தியாவில் உள்ள மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமாக நரேந்திர மோடி ஸ்டேடியம் உள்ளது. ஒரே நேரத்தில் 1,32,000 அமர்ந்து பார்க்கும் இது உலக அளவிலும் பெரிய மைத்தனமாக உள்ளது.

 

கோவையில் அமைய உள்ள மைதானம், நரேந்திர மோடி ஸ்டேடியத்தை விட பெரிய அளவில் இருக்கும் என்றும், பல அதிநவீன வசதிகளை கொண்டு இருக்கும் என்றும் கூறப்படுகிறது. 

 

சமீபத்தில் தெலுங்கானா அரசு ஹைதராபாத் பகுதியில் புதிய மைதானத்தை கட்டுள்ளதாக அறிவித்துள்ளது. மேலும் மும்பை அரசும் நகருக்கு வெளியில் புதிய மைதானத்தை கட்ட உள்ளது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link