Covid Side Effects: மனநலத்திலும் பாதிப்பை ஏற்படுத்தும் கோவிட்! ஆய்வுகள் கூறும் உண்மை

Thu, 17 Feb 2022-2:43 pm,

மன ஆரோக்கியத்தில் தாக்கம் தொற்றுநோய் தொடங்கியதில் இருந்து, உலகில் 400 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் மட்டும் 70 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த ஆய்வில் ஈடுபட்ட வாஷிங்டன் பல்கலைகழகத்தின் ஆராய்ச்சியாளர் ஜியாத் அல் அலி,கோவிட்-19 தொற்று காரணமாக உலகில் 1,48,00,000 புதிய மனநல பிரச்சனைகள் பதிவாகியுள்ளன என்று கூறினார்.

கோவிட் காரணமாக, அமெரிக்காவில் இதுபோன்ற 28 லட்சத்திற்கும் அதிகமான வழக்குகள் பதிவாகியுள்ளன. அமெரிக்க முன்னாள் படைவீரர் நலத் துறையின் தேசிய சுகாதாரத் தரவுத்தளத்திலிருந்து கிடைத்த தரவை ஆராய்ச்சியாளர் பயன்படுத்தியுள்ளார். மார்ச் 2020 மற்றும் ஜனவரி 2021 க்கு இடையில் PCR பரிசோதனையில் பாதிக்கப்பட்டு குறைந்தது 30 நாட்களுக்குப் பிறகு மக்களிடையே மன ஆரோக்கியம் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.

கோவிட் ஏற்படுவதற்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு வரை எந்தவிதமான மனநலமும் பாதிக்கப்படாத நோயாளிகள் மட்டுமே இந்த ஆய்வில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த ஆய்வு கோவிட் பாதிப்பிற்குப் பிந்தைய தாக்கத்தை மட்டுமே மையமாகக் கொண்டது.

கோவிட்1/5ல் இருந்து மீண்ட பிறகு மன ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள் என்று ஆய்வின் முடிவுகள் பரிந்துரைக்கின்றன. புதன்கிழமை தி பிஎம்ஜேயில் வெளியிடப்பட்ட ஆய்வில், கோவிட்-19 நோய்த்தொற்றிலிருந்து மீண்டவர்கள் மனநலத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளது. இந்த தொற்றுநோய் மனநலத்தையும் பாதிக்கிறது.

கோவிட் பாதித்தவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படும் அபாயம் 39 சதவீதம் அதிகமாக இருப்பதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது. 35% மக்கள் பதட்டம் மற்றும் மன அழுத்தத்தால் பாதிக்கப்படலாம்.  அதே சமயம் 41 சதவீதம் பேருக்கு தூக்கமின்மை அல்லது தூக்கக் கோளாறு பாதிப்புகளை சந்திக்கலாம்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link