உணவே மருந்து: பல உடல் பிரச்சனைகளுக்கு தீர்வாகும் தயிர்

Tue, 18 May 2021-5:59 pm,

தயிர் சிறந்த புரோபயாடோயிக் உணவுகளில் ஒன்றாகும், இதில் நம் உடலுக்கு நன்மை பயக்கும் பல நுண்ணுயிரிகள் உள்ளன. புரோபயாடிக் உணவுகள், தொற்று நோயை எதிர்த்து போராடும், ரத்தத்தின் வெள்ளை இரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கின்றன. இதனால் பல தொற்றுநோய்கள் வருவதௌ தடுக்கப்படுவதோடு, ஒட்டுமொத்த நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுகிறது. இதனால், சாதாரண இருமல் சளி மட்டுமல்ல, கொரோனாவும் அஞ்சி ஓடும்.

நோய் எதிர்ப்பு சக்தி (Immunity) மட்டுமல்ல, தயிர் சருமத்திற்கும் தலைமுடிக்கும் அழகூட்ட மருந்து பொருளை போல் பயன்படுத்தலாம். தயிர், எலுமிச்சை மற்றும் கடலை மாவு கலவையை உங்கள் முகத்தில் தடவி, 15 நிமிடங்களுக்குப் பிறகு வெதுவெதுப்பான தண்ணீரைப் பயன்படுத்தி கழுவ வேண்டும். தயிர் ப்ளீச்சாக செயல்படுகிறது. ஆரோக்கியமான, பளபளப்பான முடியைப் பெற இது ஒரு சிறந்த வீட்டு வைத்தியம். குளிர் காலத்தில் சருமமும், முடியும் வறண்டு போகாமல் இருக்கும்.

 

எடையை குறைக்கவும் இது உதவுகிறது. கார்டிசோல் எனப்படும் ஹார்மோனில் ஏற்றத்தாழ்வு மற்றும் தவறான வாழ்க்கை முறை காரணமாக இடுப்பைச் சுற்றி அதிக கொழுப்பு குவிந்துள்ளது. தயிர் கால்சியம் நிறைந்துள்ளது, இது கார்டிசோல் உற்பத்தியை குறைப்பதால், எடையை குறைக்க உதவுகிறது. தயிர் (Curd) உட்கொள்வது உங்களை நீண்ட நேரம் புத்துணர்ச்சியுடன் இருக்க உதவும். கலோரிகளின் அளவைக் குறைப்பதன் மூலம் வயிற்றை குறைக்கவும் இது உதவுகிறது.

மேலும், தினமும் தயிர் சாப்பிடுவது கொழுப்பின் அளவைக் குறைக்க உதவும், இதனால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் உயர் இரத்த அழுத்தம் ஏற்படும் அபாயத்தை குறைக்கிறது. இதனால், இதயத்தையும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.

நீங்கள் சோர்வாக இருந்தால், உடனடியாக தயிர் எடுத்துக் கொள்ளவும். வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த, தயிர் ஒரு ஆற்றல் ஊக்கியாகும். இது ஒரு ஆக்ஸிஜனேற்றியாக செயல்படுகிறது கடின உழைப்பிற்கு பிறகு ஏற்படும் சோர்வை விரைவாக மீட்க உதவுகிறது. 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link