தமிழ்நாட்டு மக்களே அக்டோபர் 26 சிலிண்டர் கிடைக்காது, கொஞ்சம் உஷாரா இருங்க

Sat, 12 Oct 2024-1:39 pm,

தமிழ்நாடு முழுவதும் வீடுகளுக்கு சிலிண்டர் விநியோகம் செய்ய்யும் ஊழியர்கள் போராட்டம் அறிவித்துள்ளனர். குறைந்தபட்ச ஊதியம் உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் போராட்டம் நடத்த உள்ளனர். 

அக்டோபர் 26 ஆம் தேதி மாநிலம் தழுவிய அனைத்து எல்பிஜி சிடிஎம்டியு தொழிற்சங்கத்தினர் இந்த போராட்டத்தை அறிவித்துள்ளனர். இது குறித்து அந்த சங்கத்தினர் பேசும்போது, வீடுகள் மற்றும் வணிகப் பயனாளிகளுக்கு எல்பிஜி சிலிண்டர்களை வழங்கும் பணியில் 10,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். 

எண்ணெய் நிறுவனங்கள் சிலிண்டர் விநியோகம் செய்ய ஏஜென்சிகளுக்கு ரூ.32.50 கொடுத்தாலும், எந்த ஏஜென்சிகளும் சம்பளம் கொடுக்கவில்லை என்பதுதான் உண்மை.

மாநிலம் முழுவதும் உள்ள ஏஜென்சிகள் ரூ.3,000 முதல் ரூ.7,000 வரையிலான சம்பளத்தை ஊழியர்களின் கணக்கில் டெபாசிட் செய்வதாகவும், அது பின்னர் ஏஜென்சிகளால் அவை திரும்பப் பெறப்படுகிறது என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்

சிலிண்டர் விநியோகம் செய்யும் ஊழியர்கள் மோசமான சூழ்நிலையில் வாழ்கிறார்கள், தொழிலாளர் சட்டங்கள் நிர்ணயித்தபடி அவர்களுக்கு எந்த நன்மையும் கிடைப்பது இல்லை. ஊழியர்கள் நுகர்வோரிடமிருந்து பெறும் உதவித் தொகையிலேயே வாழ்கிறார்கள். 

சிலிண்டர்களை விநியோகிக்கும்போது சராசரியாக 20 ரூபாய் நுகர்வோரால் வழங்கப்படும். இதில், ஏஜென்சிகள் எங்களிடம் இருந்து 10 ரூபாயை பெற்றுக்கொள்கிறது என்றும் குற்றம்சாட்டியுள்ளனர்.

மேலும், தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி எல்பிஜி சிலிண்டர் விநியோகம் செய்பவர்கள் அக்டோபர் 26ஆம் தேதி மாநிலம் முழுவதும் சிலிண்டர் விநியோகத்தை புறக்கணித்து ஒருநாள் போராட்டம் நடத்த உள்ளதாகவும் எல்பிஜி சிடிஎம்டியு தொழிற்சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

தொழிலாளர் துறை அதிகாரிகளும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் இதில் தலையிட்டு குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயம் செய்ய வேண்டும் எனவும் இந்த சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link