Dhoni: 2007-ல் முதன்முறையாக T20உலக கோப்பையை இந்தியா வென்ற நாள் - தோனி ரியாக்ஷன்

Sun, 24 Sep 2023-6:02 pm,

2007 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையின் உயர் மின்னழுத்த இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி டி20 உலகக் கோப்பையை வென்ற முதல் அணி என்ற பெருமையை இந்திய அணி. 

 

அந்த உலக கோப்பை தான் MS தோனியை நாம் அறிந்த கேப்டனாக மாற்றி எதிர்பாராத தருணம். 

 

2007-ம் ஆண்டு மேற்கிந்தியத் தீவுகளில் நடந்த ஒருநாள் உலகக் கோப்பையில் மோசமான தோல்வியைத் தழுவியது இந்திய அணி.

 

இதனையடுத்து உடனடியாக நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் பெரும்பாலான மூத்த வீரர்கள் போட்டியில் பங்கேற்கவில்லை. 

 

அப்படியான சூழலில் உலக கோப்பைக்கு இந்திய அணியை வழிநடத்த எம்எஸ் தோனி தேர்வு செய்யப்பட்டார். 

 

அந்த தொடரில் இந்தியா அதிக ஆட்டங்களில் விளையாடாத புதிய முகங்களால் நிறைந்திருந்தது. நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஆட்டத்தில் வாஷ் அவுட் ஆன பிறகு இந்தியா இறுதிப் போட்டிக்கு வரும் என்று பலர் நினைத்திருக்க மாட்டார்கள். 

 

பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது ஆட்டம் டையில் முடிந்தது. பரபரப்பான ஆட்டத்தில் பவுல் அவுட் முறையில் இந்தியா 3-0 வித்தியாசத்தில் வென்றது.

 

அதன்பிறகு, இந்தியா 18 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது. யுவராஜ் சிங் ஸ்டூவர்ட் பிராட் ஓவரில் தொடர்ந்து ஆறு சிக்ஸர்களுக்கு விளாசி, 12 பந்துகளில் டி20யில் அதிவேக அரைசதம் அடித்த ஆட்டம் அது. 

 

அடுத்து வெற்றி பெற வேண்டிய ஆட்டத்தில் இந்தியா 37 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது. அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை 15 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

 

ஜோகன்னஸ்பர்க்கில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான உட்சக்கட்ட இறுதிப் போட்டி நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா, நடுவில் சில விக்கெட்டுகளை இழந்தது. 

 

ஆனால் கெளதம் கம்பீர் நிலைத்து நின்று அரைசதம் அடித்தார். அவர் 54 பந்துகளில் 8 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 75 ரன்கள் எடுத்தார். 

 

ரோஹித் ஷர்மா 16 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 30 ரன்கள் எடுத்தார். முடிவில் இந்தியா 157/5 எடுத்தது.

 

ஸ்கோரைத் துரத்திய பாகிஸ்தானும் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. ஆனால் மிஸ்பா-உல்-ஹக் மறுபக்கம் நங்கூரம் நிலைத்து நின்று விளையாடினார்.

அவர் 18வது ஓவரில் ஹர்பஜன் சிங் வீசிய மூன்று சிக்ஸர்களை அடித்தார். கடைசி ஓவரில் பாகிஸ்தானுக்கு 13 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. 

 

தோனி பந்தை ஜோகிந்தர் சர்மாவிடம் கொடுத்தார். மிஸ்பா அந்த ஓவரின் இரண்டாவது பந்தை சிக்ஸருக்கு டெபாசிட் செய்தார். 

 

இதனால் மீண்டும் பரபரப்பாக கட்டத்துக்கு ஆட்டம் சென்றது. உண்மையை சொல்ல வேண்டும் என்றால் பாகிஸ்தான் அணியே வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஏனென்றால் பாகிஸ்தான் அணி வெற்றிக்கு சிக்ஸர் மட்டுமே தேவைப்பட்டது. ஆனால் ஸ்கூப் ஷாட் அடித்த மிஸ்பா, ஸ்ரீசாந்த் கையால் கேட்ச் என்ற முறையில் அவுட் ஆனார். 

 

மேலும் இந்தியா ஐந்து ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் இளம் அணியுடன் விளையாடிய இந்தியா முதன்முறையாக 20 ஓவர் உலக கோப்பை சாம்பியன் ஆனது. இந்திய கிரிக்கெட்டில் மறக்க முடியாத நினைவுகளை கொண்ட இந்த வெற்றி இதே நாளில் 2007ல் இந்திய அணிக்கு கிடைத்தது.

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link