கர்ப்ப காலத்தில் நீரிழிவு நோய் அச்சமா? இந்த உணவுகள் உங்களுக்கு உதவும்

Wed, 12 Oct 2022-7:24 pm,

கர்ப்பிணிப் பெண்கள் தங்கள் உணவில் சாலட் அதிகம் உட்கொள்ள வேண்டும். சாலட் சாப்பிடுவதால் குளுக்கோஸ் அளவு குறைவாக இருக்கும். சாலட் சாப்பிடுவது சர்க்கரை நோயாளிக்கு சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. சாலட் கிளைசெமிக் இண்டெக்ஸைக் குறைத்து சர்க்கரை நோயைக் கட்டுக்குள் வைக்கிறது.

கர்ப்ப காலத்தில் முட்டை சாப்பிடுங்கள். முட்டை சாப்பிடுவதன் மூலம் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தலாம். புரதம், கால்சியம் மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் முட்டையில் காணப்படுகின்றன. இது பல நன்மைகளைத் தரும். சர்க்கரை நோய் வராமல் இருக்க தினமும் ஒரு முட்டை சாப்பிட வேண்டும்.

 

கர்ப்ப காலத்தில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த பாதாம் பருப்பைச் சாப்பிடலாம். ஊறவைத்த பாதாமை தினமும் சாப்பிடுவது குழந்தையின் மன வளர்ச்சிக்கு உதவுகிறது. சிற்றுண்டியின் போது பசி எடுத்தால் பாதாம் பருப்பை சாப்பிடலாம். இது வயிற்றை நிரப்பும், உங்களின் உணவுப் பசியும் தணியும்.

கர்ப்ப காலத்தில் நட்சை உட்கொள்ள வேண்டும். விதைகளை சாப்பிடுவதன் மூலம், உடலுக்கு நார்ச்சத்து கிடைக்கிறது. இது இரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்கும். மேலும் செரிமான பிரச்சனைகளை தடுக்கிறது. சியா விதைகளை சாப்பிடுவதன் மூலம் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தலாம். இது பசியைத் தணிக்கிறது மற்றும் உடலுக்கு கால்சியம் மற்றும் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்களும் இதன் மூலம் கிடைக்கும்.

கர்ப்ப காலத்தில் தயிர் சாப்பிடுங்கள். தயிரில் புரோ-பயாடிக்குகள் உள்ளன. இவை குடலை ஆரோக்கியமாக வைத்திருக்கும். தயிர் சாப்பிடுவதன் மூலம் நீரிழிவு நோயை பெருமளவு கட்டுப்படுத்தலாம். தயிர் செரிமானத்தை மேம்படுத்தவும், நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தவும் உதவுகிறது.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link