சிம்மத்தில் சஞ்சரிக்கப்போகும் புதன்! 5 ராசிகளுக்கு மகா மெகா பொற்காலம்! உங்களுக்கு எப்படி?

Sat, 31 Aug 2024-10:04 am,

அதிவேகமாக இயங்கும் சிறிய கிரகமான புதன் கிரகத்தை, கிரகங்களின் இளவரசன் என்றும் அழைக்கிறார்கள். தகவல் தொடர்பு, அறிவுத்திறன், ஞானம், சிந்தனைத்திறன் என அறிவுசார் விஷயங்களுக்கு காரகர் புதன் தான்...  

சனி தற்போது கும்பத்தில் இருக்கும் நிலையில், புதன் ராசி மாறுவதால் ஏற்படும் கூட்டு பலன்கள், எந்த ராசிக்கு நல்ல பலன்களைக் கொடுக்கும் என தெரிந்துக் கொள்வோம்

புதனின் சிம்ம ராசி பெயர்ச்சி பொதுவாகவே ஆக்கப்பூர்வமானதாக கருதப்படுகிறது. அதிலும், குரோதி ஆண்டில் சிம்மத்தில் புதன் இருக்கும் காலம் ஐந்து ராசிகளுக்கு அற்புதமான பொற்காலமாக இருக்கும்

புதனின் சிம்ம ராசி பெயர்ச்சி, ரிஷப ராசியினருக்கு பொற்காலம் என்றே சொல்லலாம். பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்று சொல்வது புதன்கிழமைக்கு மட்டுமல்ல, சிம்ம ராசியில் புதன் சஞ்சரிக்கும் காலத்திற்கும் பொருந்தும் என்று சொல்லும் அளவுக்கு புதனின் பெயர்ச்சி, ரிஷபத்தினருக்கு நன்மை கொடுப்பதாக இருக்கும்

சிம்மத்தில் சஞ்சரிக்கும் புதனின் நிலை, கடக ராசியினருக்கு மனத் தெளிவு, ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சியை மேம்படுத்தும். விவேகமான முடிவெடுப்பதில் ஊக்குவிக்கும் நிலையில் புதன் இருப்பதால் கடக ராசிக்காரர்களுக்கு இந்த மூன்று வாரங்கள் அற்புதமானதாக இருக்கும்

அறிவுத்திறன் வாய்ந்த சிம்மராசியினருக்கு, ஆவணி மாதத்தில் நடைபெறும் புதனின் சிம்ம ராசி பெயர்ச்சியால் பொற்காலம் என்று சொல்லும் அளவுக்கு எல்லா விதங்களிலும் அதிர்ஷ்டம் வந்து கொட்டும். நீண்ட நாள் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும், மனதில் இருந்த எண்ணங்கள் நிறைவேறும்

துலாம் ராசியினருக்கு அற்புதமான பொற்காலத்தை உருவாக்கவே, சிம்மத்தில் புதன் வருகிறாரோ என்று சொல்லும் அளவுக்கு அற்புதமான யோக காலத்தை புதனின் சஞ்சாரம் கொடுக்கும். பேர், புகழ் வந்து சேரும்

தனுசு ராசியினருக்கு புதனின் சிம்ம ராசி பெயர்ச்சியால் தொழிலில் முன்னேற்றம், வேலையில் திருப்தி, புதிய பொறுப்புகள் என வேற லெவல் பலன்கள் கிடைக்கும். பணியிடத்தில் திறமைகளுக்கு பாராட்டுகள் கிடைக்கும் என்றால், பதவி உயர்வு, சம்பளத்தில் அதிகரிப்பு என கெளரவம் கூடும்

கும்பத்தில் சனி ஆட்சி பெற்றிருக்கும் இந்த நிலையில், புதன் சிம்மத்தில் இருக்கும் காலகட்டம், கும்ப ராசியினருக்கு பொற்காலமாக இருக்கும். நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும், எதிர்காலம் தொடர்பான திட்டங்கள் தீட்டும் நேரம் இது

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் இடம் பெற்றுள்ள தகவல்கள் பொதுவானவை.  பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரைக்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link