சனி பகவானுக்கு பிடித்த ராசிகள்: அதிகம் படுத்தாமல் இவர்கள் மீது அருள் மழை பொழிவார் சனி

Tue, 20 Feb 2024-11:17 am,

அனைத்து கிரகங்களிலும் சனி பகவான் மிக முக்கியமான கிரகமாக உள்ளார். அவரது சிறிய அசைவுகளும் மிகப்பெரிய ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகின்றன.

சனியின் அருள் ஒருவருக்கு இருந்தால், அவரது வாழ்வில் அனைத்து வித மகிழ்ச்சியையும் பெறுவார். அவருக்கு அனைத்து துறைகளிலும் வெற்றி கிடைக்கும். அவர் முன்னேற்றத்திற்கு எந்த தடையும் இருக்காது.

சனி பகவான் நீதியின் கடவுள் என அழைக்கப்படுகிறார். மனிதர்கள் செய்யும் செயல்களுக்கு ஏற்ப அவர் பலன்களை அளிக்கிறார். அவர் ஒவ்வொரு ராசியிலும் அதிக காலம் இருப்பதால், ராசிகளில் அவரது தாக்கமும் அதிகமாக இருக்கும்.

சனி பெயர்ச்சி, அதாவது சனி பகவானின் ராசி மாற்றம் மிகப்பெரிய ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகின்றது. இதன் தாக்கம் அனைத்து ராசிகளின் வாழ்விலும் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்துகின்றது. அதே போல் ஏழரை சனியும் ஒரு மனிதனின் வாழ்வில் மிக முக்கிய காலகட்டமாக பார்க்கப்படுகின்றது

அனைத்து ராசிகள் மீதும் சனி பகவானின் அருள் இருக்கும். எனினும், சில ராசிகள் மீது சனி பகவானின் விசேஷ பார்வை இருக்கும். இவர்களுக்கு சனி பகவான் ஏழரை சனி காலத்திலும் பிரச்சனைகளை குறைத்து நல்ல பலன்களை அதிகமாக்கி அருள் பொழிகிறார். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

மேஷ ராசிக்காரர்கள் மீது சனியின் அருள் எப்போதும் இருக்கும். இவர்கள் மற்றவர்களுக்கு உதவுபவர்களாகவும் மிகவும் நேர்மையானவர்களாகவும் இருக்கிறார்கள். இவர்கள் தாங்கள் கஷ்டங்களை எடுத்துக் கொண்டு பிறருக்கு உதவி செய்கிறார்கள். இந்த காரணத்தால் சனி பகவான் இவர்களுக்கு அதிகமான நற்பலன்களை அளிக்கிறார்.

சுக்கிரன் துலாம் ராசியின் அதிபதியாக உள்ளார். சனி பகவான் அனைத்து ராசிகளையும் விட துலா ராசியில் உச்சம் பெற்றுள்ளார். துலாம் ராசிக்காரர்கள் மீது சனிபகவான் அதிகப்படியான அருளை பொழிக்கிறார். அவர்களது வாழ்வில் வரும் அனைத்து விதமான சங்கடங்களையும் சனி பகவான் எளிதாக போக்கிவிடுகிறார். ஜோதிட சாஸ்திரப்படி சனியும் சுக்கிரனும் நட்பு கிரகங்கள். இதன் காரணமாகவும் சனி பகவான் துலா ராசிக்காரர்கள் மீது விசேஷ அருளை பொழிகிறார். 

சனி மகர ராசியின் அதிபதியாக உள்ளார். இந்த ராசி சனி பகவானுக்கு மிகவும் பிடித்தமான ராசியாக கருதப்படுகிறது. மகர ராசிக்காரர்கள் பொதுவாக கடின உழைப்பாளியாக இருப்பார்கள். தங்கள் இலக்குகளை அடைய  இவர்கள் அதிகமாக உழைக்கிறார்கள். சனி பகவான் இவர்களுக்கு எப்போதும் உறுதுணையாக உள்ளார். 

கும்ப ராசிக்காரர்களும் சனி பகவானுக்கு பிடித்த ராசிக்காரர்கள். சனி பகவானின் அருள் இவர்கள் மீது எப்போதும் இருக்கும். இவர்கள் பெரும்பாலும் நிதி நிலையில் வலுவானவர்களாக இருப்பார்கள். கும்ப ராசிக்காரர்கள் மீது ஏழரை சனி, சனி பெயர்ச்சி ஆகியவற்றின் தாக்கம் அதிகமாக இருக்காது.

சனி பகவானின் அருள் பெற, சனி சாலிசா, ஹனுமான் சாலிசா, கோளறு பதிகம் ஆகியவற்றை கூறலாம். ஏழை எளியவர்களுக்கு உதவுபவர்களை சனிபகவான் எப்போதும் தொந்தரவு செய்ய மாட்டார். ஆகையால் நம்மால் ஆனவரை நலிந்தோருக்கு உதவுவது நல்லது.

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தூள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link