இதய ஆரோக்கியம் முதல் மலச்சிக்கல் வரை...வெறும் வயிற்றில் பப்பாளி சாப்பிட்டால் போதும்

Mon, 26 Feb 2024-2:46 pm,

பப்பாளியில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்களுடன், பொட்டாசியம், நார்ச்சத்து, புல்லட் ஆகியவை நிறைந்துள்ளன. இது உள்ள பாப்பேன் என்ற என்சைம் உடலுக்கு பலவித ஆரோக்கிய பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் அளிக்கிறது.

சிலருக்கு மலச்சிக்கல் என்பது தீராத பிரச்சனையாக வாட்டி எடுக்கும். நாச்சத்து நிறைந்த பப்பாளியை வெறும் வயிற்றில் சாப்பிடுவதால், மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து நிரந்தரமாக விடுபடலாம்.

குடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க பப்பாளி மிகவும் சிறந்தது. இது உடலை டீடாக்ஸ் செய்து, கழிவுகளை அகற்றி உடலை ஆரோக்கியமாக வைக்கிறது. அஜீரணம் வாயு போன்ற பிரச்சனைகளுக்கு முடிவு கட்டுகிறது.

கெட்ட கொலஸ்ட்ராலை எரிக்கும் தன்மை கொண்ட பப்பாளி, மாரடைப்பு வராமல் பாதுகாக்கிறது. மேலும் பக்கவாதம் இதய நோய்கள் ஏற்படாமல், உடலை பாதுகாத்துக் கொள்ள, வெறும் வயிற்றில் பப்பாளி சாப்பிடவும்.

நீரழிவு நோயாளிகள் சாப்பிடக்கூடிய மிகவும் பாதுகாப்பான பழங்களில் பப்பாளி முதன்மையானது. கிளைசிமிக் குறியீடு மிகவும் குறைவாக உள்ளதால், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்காது.

பப்பாளியில் உள்ள ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கின்றன. இதனால் தொற்று நோய்களிலிருந்தும் பருவ கால நூல்களில் இருந்தும் உடலை பாதுகாக்கலாம்.

உடல் பருமனை குறைக்க நினைப்பவர்களுக்கு பப்பாளி ஒரு வரப்பிரசாதம். இதில் உள்ள நார்ச்சத்து, மற்றும் கொழுப்பை எரிக்கும் ஆற்றல், உடலில் உள்ள கொழுப்பை கரைத்து உடல் பருமனையும் தொப்பையையும் குறைக்கிறது.

பொறுப்புத் துறப்பு: எங்கள் கட்டுரை தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே. மேலும் விவரங்களுக்கு எப்போதும் நிபுணர் அல்லது உங்கள் மருத்துவரை அணுகவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது. 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link