ஆப் கோளாறு! ஒரே ஆர்டரை 42 பேர் ஒன்றாக டெலிவரி, சிறுமி அதிர்ச்சி!

Fri, 04 Dec 2020-8:32 am,

'சன் ஸ்டார்.காம்' அறிக்கையின்படி, பிலிப்பைன்ஸின் செபு நகரில், பள்ளியில் படிக்கும் ஒரு பெண் மதியம் உணவு பயன்பாட்டின் மூலம் ஆர்டர் செய்துள்ளார். இதற்குப் பிறகு சிறுமி பாட்டியுடன் வீட்டில் காத்திருந்ததார். இதற்குப் பிறகு நடந்தது அனைவருக்கும் மிகவும் ஆச்சரியமாக இருந்தது.

ஆர்டர் செய்த சிறிது நேரத்தில், டெலிவரி பாய் உணவுடன் சிறுமியின் தெருவை அடைந்தான். ஆனால் பல டெலிவரி சிறுவர்கள் அந்தத் தெருவில் ஒரே உணவைக் கொண்டு சென்றுள்ளனர். மொத்தம் 42 டெலிவரி பாய்கள் அங்கு வந்துள்ளனர். 

அக்கம்பக்கம் வசிப்பவர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வந்து இந்த காட்சியைப் பார்த்தனர். இந்த சபவத்தை அங்கு வசிக்கும் ஒரு நபர் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டு இருந்தார். இந்த சம்பவானது வைரலாகி வருகிறது. 

உண்மையில், இது அனைத்தும் உணவு பயன்பாட்டில் தொழில்நுட்ப குறைபாடு காரணமாக நடந்தது, ஒரு டெலிவர் பாய் வரவேண்டிய இடத்தில் 42 பேர் வந்துள்ளனர். பயன்பாடு சரியாக இயங்காததால், சிறுமி செய்த ஆர்டருக்கு 42 டெலிவரி பாய்கள் அங்கு அடைந்தனர், அவர்கள் அனைவரும் உணவுடன் அங்கு சென்றனர்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link