குரு பெயர்ச்சி பலன்கள்: இந்த ராசிகளுக்கு நாளை முதல் குபேர ராஜயோகம் ஆரம்பம்

Tue, 30 Apr 2024-8:38 am,

சனாதன் பஞ்சாங்கத்தின்படி, மே 01 அன்று கலாஷ்டமி. இந்த நாளில், சிவபெருமானின் உக்கிர வடிவமான கால பைரவ் தேவ் வணங்கப்படுகிறார். மேலும், அவர்களுக்காக விரதமும் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த வருடத்தின் மிகப்பெரிய ராசி மாற்றம் இந்த நாளில் நடக்க உள்ளது. இந்த தேதியில், தேவகுரு வியாழன் மேஷ ராசியிலிருந்து வெளியேறி ரிஷப ராசிக்கு மாறுகிறார். வியாழனின் சஞ்சாரம் அனைத்து ராசிக்காரர்களையும் அவர்களின் வீட்டிற்கு ஏற்றவாறு பாதிக்கும். இதில் 4 ராசிக்காரர்கள் அதிக பலன்களைப் பெறுவார்கள். வாருங்கள், இந்த 4 ராசிகளைப் பற்றி தெரிந்து கொள்வோம்-

குரு பெயர்ச்சி: ஜோதிடர்களின் கூற்றுப்படி, மே 1 ஆம் தேதி மதியம் 12:59 மணிக்கு குரு மேஷ ராசியிலிருந்து வெளியேறி ரிஷப ராசிக்குள் நுழைந்து, அடுத்த ஒரு வருடம் ரிஷப ராசியில் இருப்பார். எனவே இந்த குரு பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு லாபம், பண வரவு, அதிர்ஷ்டம் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

மேஷம்: மேஷ ராசிக்காரர்கள் குரு ராசி மாற்றத்தால் அதிக பலன்களைப் பெறுவார்கள். மேஷ ராசிக்காரர்களின் செல்வ வீட்டில் வியாழன் இடம் பெறுவார். இதனால் உங்களின் செல்வம் சேரும் வாய்ப்புகள் உண்டு. வருமானம் உயரும். தாயார் வழி உறவுகள் சீராகும். சிலருக்கு வீடு மாற்றம், இடமாற்றம் ஆகியவை நடக்கும். பேச்சுத் திறமை அதிகரிக்கும்.

கடகம்: கடக ராசிக்காரர்களுக்கு குரு ராசி மாற்றத்தால் பலன் கிடைக்கும். சுப பலன்கள் கிடைக்கும். வருமான வீட்டில் குரு அமைவதால், கடக ராசிக்காரர்களுக்கு வருமானம் கூடும். உங்களின் விவாதத் திறமை அதிகரிக்கும். உற்றார், உறவினர்கள் நண்பர்களிடம் சுமுகமான உறவு தொடரும். உடல் உபாதைகள் நீங்கும். எதிர்பாராத புதிய பொறுப்புகள் தேடி வரும். இதனால் கூடுதல் வருமானமும் கிடைக்கும். 

சிம்மம்: மே 01 அன்று, குரு பகவான் வியாழன் ரிஷப ராசியில் பெயர்ச்சி அடைகிறார். இதனால் ​​சிம்ம ராசிக்காரர்களுக்கு தொழிலில் எதிர்பார்த்த வெற்றியைப் பெறலாம். வியாபாரம் பெருகும். நிதி ஆதாயம் உண்டாகும். குடும்பத்தில் இருந்த மனஸ்தாபங்கள் தீரும். திடீரென 2- 3 மடங்கு சம்பளம் உயரும் வாய்ப்புகளும் கூட உண்டு.

கன்னி: தற்போது கேது கன்னி ராசியில் பயணித்து வருகிறார். அதே சமயம் ராசி மாற்றத்தின் போது குரு கன்னி ராசியின் அதிஷ்ட வீட்டில் அமர்வார். இதனால் கன்னி ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தின் ஆதரவைப் பெறுவார்கள். இது எல்லா துக்கத்தையும் அடியோட நீக்கிவிடும். திடீர் பண ஆதாயமும் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் எந்தக் குறைபாடும் ஏற்படாது. எதிர்பார்த்த அளவுக்கு வருமானம் கிடைக்கும். புத்திரபாக்கியம் கிடைக்கும்.

குரு பகவானின் அருள் பெற, "குரு பிரம்மா குரு விஷ்ணு குரு தேவோ மகேஸ்வர; குரு சாஷாத் பரப்பிரம்மா தஸ்மை ஸ்ரீகுருவே நமஹ" என்ற ஸ்தோத்திரத்தை தினமும் சொல்லலாம்.

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link