`என்னைக்கும் ராஜா நான்...` விருது வாங்கியே சாதனை படைக்கும் விராட் கோலி - கௌரவிக்கும் ஐசிசி

Thu, 25 Jan 2024-6:33 pm,

கடந்த 2023ஆம் ஆண்டுக்கான விருதுகளை ஐசிசி அறிவித்து வருகிறது. அதில், ஒருநாள் கிரிக்கெட் அரங்கின் ஆடவர் அணியில் சிறந்த வீரருக்கான விருதும் இன்று அறிவிக்கப்பட்டது. 

 

இந்த விருதுக்கான பரிந்துரையில் பலர் இருந்தாலும், இந்தியா சார்பில் விராட் கோலி மட்டுமின்றி சுப்மான் கில், முகமது ஷமி ஆகியோரும் போட்டியில் இருந்தனர். 

 

அந்த வகையில், இந்தாண்டுக்கான ஆடவர் அணியில் சிறந்த ஓடிஐ வீரர் விருதை ஐசிசி விராட் கோலிக்கு இன்று அறிவித்துள்ளது.

இந்த விருதை அவர் நான்காவது முறையாக பெறுகிறார். இதற்கு முன் 2012, 2017, 2018 ஆகிய ஆண்டுகளுக்கு பின் தற்போது வென்றுள்ளார். இதிலும், விராட் கோலி புதிய சாதனையை படைத்துள்ளார். 

 

இந்த விருதை நான்கு முறை முதல்முறையாக வென்றவர் என்ற சாதனையை விராட் கோலி படைத்தார். மேலும், இந்த விருதை ஏ பி டிவில்லியர்ஸ் மூன்று முறை பெற்றிருந்தார். தற்போது அதையும் தாண்டி விராட் கோலி சாதனை படைத்துள்ளார். 

 

விராட் கோலி இந்தாண்டு சர்வதேச அரங்கில் சிறப்பாக விளையாடியிருந்தார். 36 இன்னிங்ஸில் 2,048 ரன்களை குவித்து அசத்தினார். ஒருநாள் போட்டிகளில் மட்டும் 1,584 ரன்களை விராட் சேர்த்தார். 

 

கடந்தாண்டு நடைபெற்ற ஒருநாள் போட்டிக்கான உலகக் கோப்பை தொடரிலும் சிறப்பாக விளையாடி, டாப் ஸ்கோரராக விராட் கோலி விளங்கினார். அதற்காக தொடர் நாயகன் விருதையும் விராட் பெற்றார்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link