ரத்த சோகையா... சோர்வு, பலவீனத்தை விரட்டும் ‘சில’ உணவுகள்!

Wed, 11 Oct 2023-12:10 pm,

உடலில் உள்ள இரத்த சோகையை நீக்கி, ரத்தத்தில் உள்ள ஆக்ஸிஜனின் அளவை அதிகரித்து, அதன் மூலம், உடலின் அனைத்து உறுப்புகளுக்கும் ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த இரத்தத்தை வழங்க இரும்பு சத்து மிக அவசியம். இந்நிலையில், சோர்வு, பலவீனத்தை விரட்டும் இரும்பு சத்து நிறைந்த உணவுகளை பற்றி அறிந்து கொள்ளலாம்.

உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்க, ஒரு கப் வேகவைத்த பீட்ரூட் மற்றும் கேரட்டை நறுக்கி, மிக்ஸியில் சேர்க்கவும். அவற்றை நன்றாக கலக்கவும். இப்போது வடிகட்டியின் உதவியுடன் சாற்றை வடிகட்டி ஒரு பாத்திரத்தில் எடுக்கவும். இந்த சாற்றில் எலுமிச்சை சாறு பிழிந்து சாப்பிடுங்கள்.  இந்த சாற்றை தினமும் தவறாமல் உட்கொள்ளுங்கள். கேரட், பீட்ரூட்டை சாலட் வடிவிலும் சேர்த்துக்கொள்ளலாம். 

பேரீச்சம்பழம், அத்திப்பழம் மற்றும் திராட்சை கலவையில் இரும்புச்சத்து மற்றும் மெக்னீசியம், தாமிரம், வைட்டமின் சி மற்றும் ஏ ஆகியவை நிறைந்துள்ளன.  2-3 ஒரே இரவில் ஊறவைத்த பேரீச்சம்பழங்கள், 2 அத்திப்பழங்கள் மற்றும் ஒரு தேக்கரண்டி திராட்சையை காலை உணவில் எடுத்துக் கொள்வது உடனடி ஆற்றலை வழங்குவதோடு, இரும்புச்சத்தும் நிறைய கிடைக்கும். 

முருங்கை இலையில் இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, சி மற்றும் மெக்னீசியம் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. 1 டீஸ்பூன் முருங்கை இலை பொடியை நெய் அல்லது தேனுடன் தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுங்கள். இதன் மூலம் ஆற்றல் அபரிமிதமாக கிடைக்கும். ரத்த சோகை நீங்கும். ஆனால் கோடை காலத்தில் முருங்கை சாப்பிடுவதை தவிர்க்கவும்.

கோதுமை புல் பீட்டா கரோட்டின், வைட்டமின் கே, ஃபோலிக் அமிலம், கால்சியம், இரும்பு, புரதம் மற்றும் நார்ச்சத்து, வைட்டமின் சி, பி வைட்டமின்கள் ஆகியவற்றின் சிறந்த மூலமாகும்.  உடலில் இரும்பு மற்றும் இரத்தத்தின் அளவை அதிகரிப்பதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தினமும் காலையில் 1 டீஸ்பூன் (3-5 கிராம்) கோதுமை புல் பொடியை வெதுவெதுப்பான நீரில் கலந்து  உட்கொள்வது ஹீமோகுளோபின் அதிகரிப்பதற்கும் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதற்கும் உதவும்.

வெள்ளை மற்றும் கருப்பு எள் இரண்டிலும், இரும்பு, தாமிரம், துத்தநாகம், செலினியம் மற்றும் வைட்டமின்கள் பி6, ஃபோலேட் மற்றும் ஈ போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்க, சுமார் 1 தேக்கரண்டி கருப்பு எள்ளை எடுத்து உலர்த்தி வறுக்கவும். இவற்றில் ஒரு ஸ்பூன் தேன் மற்றும் நெய் சேர்க்கவும். எள் உருண்டை சாப்பிடுவதும் நல்ல பலன் தரும். 

பொறுப்புத் துறப்பு: எங்கள் கட்டுரை தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே. மேலும் விவரங்களுக்கு எப்போதும் நிபுணர் அல்லது உங்கள் மருத்துவரை அணுகவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link