லக்னோ - கொல்கத்தா போட்டியின் சுவாரஸ்யங்கள்

Thu, 19 May 2022-8:54 am,

டாஸ்வென்ற லக்னோ அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதிரடியாக விளையாடிய டிகாக் 140 ரன்கள் விளாசினார். ஐபிஎல் தொடரில் தனிநபர் ஒருவரின் 3வது அதிகபட்ச ஸ்கோராக பதிவானது.

இப்போட்டியில் லக்னோ அணி விக்கெட் இழக்காமல் 210 ரன்கள் எடுத்தது. 20 ஓவர்கள் விக்கெட் இழக்காமல் 210 ரன்கள் எடுத்த முதல் அணி என்ற சாதனையை படைத்தது. கே.எல்.ராகுல் - டிகாக்கின் சாதனை பார்ட்னர்ஷிப்பாகவும் பதிவாகியுள்ளது. 

 

அதிரடியாக விளையாடி ரிங்கு சிங் லக்னோ அணிக்கு பயம் காட்டிக் கொண்டிருந்தார். அப்போது, எவின் லூயிஸ் பறந்து வந்து கேட்ச் பிடித்தார். இந்த ஐபிஎல் போட்டியில் சிறந்த கேட்சாகவும் பதிவாகியுள்ளது.

அணியை வெற்றிப் பாதைக்கு அருகில் அழைத்துச் சென்ற ரிங்கு சிங், தோல்வியை தழுவியதும் மைதானத்தில் கண்ணீர் விட்டு அழுதார். பல போட்டிகளில் வாய்ப்பு கிடைக்காமல் வெளியே உட்கார வைக்கப்பட்ட அவர், நேற்று 15 பந்துகளில் 40 ரன்கள் விளாசினார்.

 

லக்னோ அணியின் பந்துவீச்சாளர் மொனீஷ்கான் சிறப்பாக பந்துவீசி அசத்தினார். ரஸ்ஸல், வெங்கடேஷ் ஐயர் மற்றும் டோமர் ஆகிய மூன்று முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link