வங்கியில் பணத்தை டெபாசிட் செய்ய பான் கார்ட் கட்டாயம்?

Wed, 12 Jun 2024-12:07 pm,

இந்தியாவில் வங்கிகள் தொடர்பான விதிமுறைகள் அவ்வப்போது மாறிக்கொண்டே இருக்கும். தற்போது டிஜிட்டல் யுகத்தில் நாள் ஒன்றுக்கு பல கோடி ரூபாய் பரிவர்த்தனை நடைபெறுகிறது.

 

பான் கார்டு எனப்படும் நிரந்தர கணக்கு எண் வருமான வரித் துறையால் வழங்கப்படுகிறது. நிதி தொடர்பான அனைத்து சேவைகளுக்கும் பான் எண் கட்டாயம் ஆகும். 

 

பான் எண் தனி நபருக்கும், ஒரு நிறுவனத்தின் பெயரிலும் பெற்று கொள்ள முடியும். இது வரி நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுகிறது.

 

வங்கியில் ஒரே நாளில் 50,000 ரூபாய்க்கு மேல் பணமாக டெபாசிட் செய்ய பான் எண்ணை கண்டிப்பாக வழங்க வேண்டும். மேலும் ஒரு நிதியாண்டில் ரூ. 20 லட்சத்திற்கு மேல் பரிவர்த்தனை செய்தாலும் பால் கட்டாயம் தேவை. 

 

ஒரு நிதியாண்டில் வங்கி கணக்குகளில் ரூ. 20 லட்சத்திற்கு மேல் டெபாசிட் செய்தாலோ அல்லது எடுத்தாலோ முறையான ஆவணங்களை கொடுக்க வேண்டும். 

 

தற்போது எந்த ஒரு வங்கி அல்லது தபால் கணக்கை திறந்தாலும் அதற்கு பான் எண்னை கட்டாயம் வழங்க வேண்டும். பான் இல்லாத பட்சத்தில் அப்ளை செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link