வீட்டின் பிரதான நுழைவாயில் எப்படி இருக்க வேண்டும்; வாஸ்து கூறுவது என்ன!

Wed, 14 Sep 2022-8:57 pm,

வாஸ்துசாஸ்திரத்தில், வீட்டின் பிரதான கதவு தொடர்பான சில விஷயங்களுக்கு சிறப்பு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. வீட்டின் பிரதான வாசலில் இருந்து தான் தீய சக்திகள் வீட்டிற்குள் நுழைவதாக வாஸ்து நிபுணர்கள் கூறுகின்றனர். இதன் காரணமாக, வீட்டில் எதிர்மறை ஆற்றல் குடியேறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். 

வீட்டின் முன் கோயில், தூண், கட்டிடம் எதுவும் இருக்கக்கூடாது. இவற்றில் ஏதேனும் ஒன்றின் நிழல் பிரதான கதவு மீது விழுந்தால், அது அசுபமாக கருதப்படுகிறது. வீட்டில் எதிர்மறையான விளைவுகளைத் தவிர்க்க வீட்டின் பிரதான கதவின் இருபுறமும் மஞ்சளால் ஸ்வஸ்திகா அல்லது ஓம் சின்னத்தை வரையவும்.

 

வீட்டின் பிரதான கதவு வீட்டின் உட்புறத்தில் திறக்கப்பட வேண்டும் என்று வாஸ்து நிபுணர்கள் கூறுகின்றனர். இதன் காரணமாக வீட்டில் உள்ள நேர்மறை ஆற்றல் ஓட்டம் வீட்டிற்குள் நுழைந்து, அமைதியை ஏற்படுத்த அதிக வாய்ப்புள்ளது.

 

உடைந்த கண்ணாடி பொருட்கள், குப்பைகள் போன்றவற்றை வீட்டின் பிரதான கதவுக்கு அருகில் வைக்க வேண்டாம். இவ்வாறு செய்தால் அது குடும்ப உறுப்பினர்களின் முன்னேற்றத்தையும் செல்வ வளத்தையும் பாதிக்கும். மேலும் பணம் அதிகம் செலவாகும்.

வாஸ்து படி வீட்டின் பிரதான கதவை திறக்கும் போது சத்தம் வரக்கூடாது. அதேபோல், கதவு தரையைத் தொடக்கூடாது. இது வீட்டில் எதிர்மறை ஆற்றல் ஓட்டத்தை அதிகரிக்கிறது. கதவை திறக்கும் போது சத்தம் வரக் கூடாது. அத்தகைய சூழ்நிலையில், கதவை எண்ணெய் கொண்டு சரிசெய்ய வேண்டும்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link