முளை கட்டிய தானியங்களை சாப்பிடும் சரியான முறை இது தான்... !

Fri, 15 Sep 2023-8:37 pm,

ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் பலர் முளை கட்டிய தானியங்களை அதிகம் உணவில் சேர்க்கின்றனர். முளை கட்டிய தானியங்களில் புரதம், நார்ச்சத்து, கால்சியம், வைட்டமின் ஏ மற்றும் சி போன்றவை நிறைந்துள்ளன. பெரும்பாலானோர், முளை கட்டிய தானியங்களை  காலை உணவாக சாப்பிடுவார்கள். 

 

பச்சைப்பயறு, கொண்டக்கடலை, வெந்தயம், எள்ளு, வேர்க்கடலை, சூரியகாந்தி விதை, வெள்ளரி விதை, கொள்ளு மற்றும் கறுப்பு உளுந்து போன்ற வகை தானியங்களை வீட்டில் வைத்து முளைக்கச் செய்து சாப்பிடலாம். தானியங்களை நீரில் நன்றாக கழுவி 8 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

 

முளை கட்டிய தானியங்கள்  ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். ஆனால் சில சமயங்களில், அதனை செரிமானம் செய்வதில் சில பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். அதனால் பல நேரங்களில் அசிடிட்டி, வயிற்று உப்புசம், மலச்சிக்கல், பைல்ஸ் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன

குறைந்த நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்கள் அல்லது செரிமான அமைப்பு பலவீனமாக இருப்பவர்கள் முளை கட்டிய தானியங்களை பச்சையாக சாப்பிடக்கூடாது. அத்தகைய சூழ்நிலையில், அவர்கள் முளை கட்டிய தானியங்களை சாப்பிட விரும்பினால், முதலில் சிறிது எண்ணெய், இஞ்சி  போன்றவற்றை சேர்த்து சமைக்கவும்.

 

முளை கட்டிய தானியங்களில் பல வகையான சத்துக்கள் மிகுதியாகக் காணப்படுகின்றன. பல நேரங்களில் உடலால் அனைத்து ஊட்டச்சத்துக்களையும் உறிஞ்ச முடியாது. இதன் காரணமாக முளைகளை பச்சையாக அல்ல, சிறிது நேரம் சமைக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் அனைத்து சத்துக்களும் உடலுக்கு நன்றாக சென்றடையும்.

முளை கட்டிய தானியங்கள், செடி மற்றும் விதை நிலையில் உள்ளன. மாற்றங்கள் நிறைவடையாத எந்தவொரு பொருளையும் உடைத்து ஜீரணிக்க உடலுக்கு அதிக நேரம் எடுக்கும், அதன் காரணமாக வாயு மற்றும் அமிலத்தன்மை ஏற்படுகிறது.

 

பொறுப்புத் துறப்பு: எங்கள் கட்டுரை தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே. மேலும் விவரங்களுக்கு எப்போதும் நிபுணர் அல்லது உங்கள் மருத்துவரை அணுகவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link