Coconut: ஆன்மீகம், ஆரோக்கியம் இரண்டிற்கும் உகந்த தேங்காய்...!!!

Sat, 22 May 2021-5:25 pm,

தேங்காய் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துகிறது. ஏனென்றால், அதில். ஆன்டிவைரல் கூறுகள் உள்ளன. இது நோய்களுக்கு எதிராக போராடும் திறனை அதிகரிக்கும். கொரோனா காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் அவசியம்.

நம் முன்னோர்கள் உணவில் அதிக அளவில் தேங்காய் மற்றும் தேங்காய் எண்ணையை பயன்படுத்தினர்.  தேங்காய் எண்ணையினால் நினைவாற்றல் அதிகரிக்கிறது. தினமும் அதிகாலையில் சிறிதளவு தேங்காய் எண்ணெய் உட்கொண்டால் அல்சீமர் நோய் (Alzheimer's disease) குணமடையும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

தாய் பாலில் உள்ள லாரிக் ஆசிட் , தேங்காய் பாலில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை நீங்கள் வேறு எந்த உணவிலிருந்தும் பெற முடியாது. தேங்காய் ஒரு நல்ல ஆண்டிபயாடிக்.  இது உங்களை அனைத்து வகையான ஒவ்வாமைகளிலிருந்தும் அதாவது அலர்ஜியில் இருந்தும் பாதுகாக்கிறது.

தேங்காய்க்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் என்றால், அது தூய்மையின் உருவமாக கருதப்படுகிறது. மற்ற பழ மரங்களைப் போல் மனிதர்கள் அல்லது பறவைகள் கடித்து போட்ட கொட்டையிலிருந்து வளருவதில்லை.  முழுமையான தேங்காயிலிருந்து தென்னங்கன்று வளர்க்கப்படுகிறது. அதனுடைய இளநீரும் கைபடாமல் இருக்கிறது. அதனால் அது தெய்வத்திற்கு படைக்க உகந்த பொருளாக  கருதப்படுகிறது.

தேங்காய் ஒரு நல்ல ஆண்டிபயாடிக்.  இது உங்களை அனைத்து வகையான அலர்ஜியில் இருந்தும் பாதுகாக்கிறது.தேங்காய் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.  இது கெட்ட கொழுப்பைக் குறைக்க உதவுகிறது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link