ரயில் தண்டவாளங்களுக்கு இடையே கற்கள் போடப்படுவது ஏன்? சுவாரஸ்யமான காரணம் இவை...

Fri, 04 Feb 2022-1:29 pm,

ரயில் பாதையையும், தண்டவாளத்தையும் பார்க்க மிகவும் எளிமையாக இருக்கிறது, உண்மையில் இது அவ்வளவு எளிதானது அல்ல, அந்த பாதையின் கீழ் கான்கிரீட் போடப்பட்டு உள்ளன, அவை ஸ்லீப்பர்கள் என்று அழைக்கப்படுகின்றன, இந்த ஸ்லீப்பர்களுக்கு இடையில் போடப்பட்டிருக்கும் கற்கள் பாலாஸ்ட் என்று அழைக்கப்படுகிறது. இரண்டு அடுக்கு மண் போடபப்ட்டு, அதற்கும் மேல் கற்கள் போடப்பட்டுள்ளது.  

இரும்பினால் செய்யப்பட்ட ஒரு ரயிலின் எடை சுமார் 1 மில்லியன் கிலோ ஆகும், இது பாதையில் மட்டுமே கையாள முடியாது. இவ்வளவு கனமான ரயிலின் எடையைக் கையாள்வதில், இரும்பினால் ஆன தடங்கள், கான்கிரீட்டால் செய்யப்பட்ட ஸ்லீப்பர்கள் மற்றும் கற்கள் அனைத்தும் பங்களிக்கின்றன. 

ரயிலின் பெரும்பாலான சுமை இந்த கற்களில் மட்டுமே உள்ளது. கான்கிரீட்டால் செய்யப்பட்ட ஸ்லீப்பர்கள் இருக்கும் இடத்தை விட்டு நகராமல் இருப்பது கற்களால் தான் என்பது சுவராசியமான விஷயம்.

பாதையில் புல் மற்றும் பிற தாவரங்களுக்கு எதிராக பாதுகாக்க உதவுகிறது. பாதையில் கற்கள் பதிக்கப்படாவிட்டால், பாதையில் புல் மற்றும் மரங்கள் வளர்ந்துவிடும். இதை தடுப்பது தண்டவாளங்களில் இருக்கும் கற்கள் தான். 

தண்டவாளத்தில் ரயில் செல்லும் போது அதிர்வு ஏற்பட்டு, இதன் காரணமாக தண்டவாளங்கள் நகரும் வாய்ப்பு அதிகரித்து, அதிர்வை குறைக்கவும், தண்டவாளங்கள் நகராமல் தடுக்கவும், பாதையில் கற்கள் பதிக்கப்படுகின்றன.

ரயில் தண்டவாளத்தில் ஓடும் போது, ​​அனைத்து எடையும் கான்கிரீட் செய்யப்பட்ட ஸ்லீப்பர் மீது விழுகிறது. அதைச் சுற்றி அமைக்கப்பட்ட கற்கள் கான்கிரீட் ஸ்லீப்பர் நிலையாக இருப்பதை எளிதாக்குகிறது. இந்தக் கற்கள் தான் ரயிலின் சுமூகமான இயக்கத்திற்கு காரணம் ஆக இருக்கிறது.

தண்டவாளத்தில் கற்கள் பதிப்பதன் நோக்கங்களில் ஒன்று, தண்டவாளத்தில் தண்ணீர் தேங்குவதில் எந்தப் பிரச்னையும் இல்லை. தண்டவாளத்தில் மழைநீர் விழும்போது, ​​தரையில் உள்ள கல் வழியாக செல்வதால், தண்டவாளத்தின் இடையே தண்ணீர் தேங்குவதில் பிரச்னை இல்லை. இது தவிர தண்டவாளத்தில் போடப்பட்டுள்ள கற்கள் தண்ணீர் கூட ஓடுவதில்லை.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link