யூனிட் 731: இரண்டாம் உலகப்போரின் மிக கொடூரமான சித்திரவதை இல்லம்

Mon, 16 Nov 2020-10:01 pm,

யூனிட் 731 ஜப்பானிய இராணுவத்தால் உயிரியல் ஆயுதங்களைத் தயாரிக்கத் தொடங்கப்பட்டது. எதிரிகளின் மீது பயன்படுத்தும் நோக்கில் இந்த உயிரியல் ஆயுதங்கள் தயாரிக்கப்பட்டன. இங்கு சிறைபிடிக்கப்பட்ட மனிதர்களின் உடலில் ஆபத்தான வைரஸ்கள் மற்றும் ரசாயனங்கள் செலுத்தப்பட்டன. அது அவர் அதோடு இந்த ஆய்வகத்தில் மனிதர்களுக்கு நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு  சித்திரவதைகள் கொடுக்கப்பட்டன. இங்கு போர் கைதிகள் ஓவனில் வறுக்கப்பட்டனர்.

இந்த ஆய்வகத்தில், சீனா, அமெரிக்கா மற்றும் பிரிட்டன் போன்ற நாடுகளில் இருந்து பிடிபட்டவர்கள் விலங்குகளைப் போல பரிசோதனைக்காக பயன்படுத்தப்பட்டனர்.  பலர் சித்திரவதைக்குள்ளாகி இறந்தனர். 

ஃப்ரோஸ்ட்பைட் டெஸ்டிங் என்ற ஒரு சோதனையில், ஒரு நபரின் கை, கால்கள் தண்ணீரில் மூழ்க வைத்து. தண்ணீரை உறைய வைத்தனர். பின்னர் உறைந்த கைகளும் கால்களும் பின்னர் சூடான நீரில் வைக்கப்பட்டு, வெவ்வேறு வெப்பநிலைகள் மனித உடலில் எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை பரிசோதித்தனர். இந்த ஆபத்தான பரிசோதனையில் பலர் உயிர் இழந்தனர்.

மிக ஆபத்தான வைரஸ்கள் முதலில் மனிதர்களின் உடலில்  செலுத்தப்பட்டு, அவற்றின் பாதிக்கப்பட்ட உறுப்புகள் வெட்டப்பட்டு நோய் மேலும் பரவுகிறதா என்று பல முறை பரிசோதிக்கப்பட்டது. இந்த ஆபத்தான சோதனையில் பலர் உயிர் இழந்த போதிலும், உயிர் பிழைத்தவர்கள் துப்பாக்கியால் மனித உடலுக்கு எவ்வளவு சேதம் ஏற்படக்கூடும் என்பதை அறிய 'துப்பாக்கி சூடு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

யூனிட் 731 இன் மிகவும் ஆபத்தான சோதனை என்னவென்றால், பிணயக்கைதிகளாக உள்ள ஆண்களும் பெண்களும் உடல் உறவு கொள்ள கட்டாயம் ஏற்பட்டது. இதற்கு முன்னதாகவே, நோயைப் பரப்பும் வைரஸை ஏற்கனவே உடலில் செலுத்தப்பட்டிருக்கும். இந்த பரிசோதனையின் மூலம், பாலியல்  தொடர்பு மூலம் பரவும் நோய் எவ்வாறு பரவுகிறது என்பதைக் கண்டறிய முயற்சிக்கப்பட்டது. இது தவிர, பல பெண்களின் உடலில் வைரஸை செலுத்திய பிறகு, அவர்களுக்கு  பிறந்த குழந்தைக்கு வைரஸ் என்ன பாதிப்பை ஏற்படுத்தும் என்பதைக் காணவும் அவர்கள் கர்ப்பமாக்கப்பட்டனர். இந்த வகையில் பல பெண்கள் கொல்லப்பட்டனர்.

சீனாவின் பிங்பாங்கில் உள்ள யூனிட் 731 மட்டும் ஆபத்தான ஆய்வகமாக செயல்படவில்லை. இதற்கு,  சீனாவில் லிங்கோ (கிளை 162), முட்ன்ஜியாங் (கிளை 643), சன்வு (கிளை 673) மற்றும் ஹெய்லர் (கிளை 543)  உள்ளிட்ட பல கிளைகளைக் கொண்டிருந்தது. இருப்பினும், இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, இந்த அனைத்து ஆய்வகங்களிலும் ஆபத்தான சோதனைகளின் பணிகள் நிறுத்தப்பட்டு இந்த இடங்கள் வெறிச்சோடி கிடக்கின்றன. இப்போது இந்த இடங்களை பார்வையிட மக்கள் வருகிறார்கள்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link