பிக்பாஸ் 8: எவிக்ட் ஆன ரவீந்தர் குறித்த ‘இந்த’ உண்மை தெரியுமா உங்களுக்கு?

Mon, 14 Oct 2024-6:39 pm,

பிக் பாஸின் போட்டியாளர்களைப் பல கோணத்தில் விமர்சனம் செய்து வருபவர் ஃபாட்மேன் ரவீசந்திரன்.

பிக் பாஸ் வீட்டில் இருக்கும் பல போட்டியாளர்கள் பற்றி அறிந்து அதன்பிறகு சமூக வலைத்தளத்தில் போட்டியாளர்களை வெவ்வேறு விதமாக விமர்சனம் செய்து வந்துள்ளார்.

ரவீந்தர் சந்திரசேகர் லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் சொந்தக்காரர்.இவரின் தயாரிப்பில் கொலை நோக்குப் பார்வை,முருங்கைக்காய் சிப்ஸ்,சுட்ட கதை போன்ற படங்களின் தயாரிப்பாளர். பிக்பாஸ்  7 சீசன்களின் போட்டியாளர்களை விமர்சித்து வந்து பிரபலமானவர்.

ரவீந்திரனைச்  சந்திரசேகரன் ரசிகர்கள்  இவரை  ஃபேட்மேன்  என்று பேர் சொல்லிக் கூப்பிட ஆரம்பித்தனர்.இவருக்கு முதல் திருமணம்  பல  கருத்து வேறுபாடுக் காரணமாக விவாகரத்தில் முடிந்தது. விவரத்துக்குப்  பிறகு தனியாக வாழ்ந்து வந்தார்.பிறகு  சீரியல்  நடிகை மகாலட்சுமி ரவீந்திரனை  திருமணம்   செய்துக்  கொண்டார்.

மஹாலட்சுமிக்கு இது இரண்டாவதுத் திருமணம். இவருக்கு  ஒரு மகன் உண்டு. மஹாலட்சுமியும் அவரது மகனும் ரவீந்திரனுடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றனர்.. 

ரவீந்திர சந்திரசேகரன் குற்றப்பிரிவில்  ரூபாய் 16 கோடி மோசடி செய்து ஏமாற்றியதாக இவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

ரவீந்திரனுக்குச்  சிறையில் உணவு சாப்பிடவோ, படுக்கவோ வசதி இல்லாததால் பெரிதும்  கஷ்டங்களை  அனுபவித்தார். இவருக்குச்  செப்டம்பர் 8 அன்று சென்னை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

ஒரு மாதத்திற்குப் பிறகு, ரவீந்திரனுக்கு  ஜாமீனில் வெளிவந்தார்.இவர் நிபந்தனை ஜாமீனில் சிறையிலிருந்து விடுக்கப்பட்டு வெளிவந்ததது குறிப்பிடத்தக்கது. ..

ரவீந்திர சந்திரசேகரன் பல மோசடிகளைச் செய்தாலும் அவரது உடல் மிகவும் பெரிதாக இருப்பதால் இவருக்கு சில உடல் ரீதியான கஷ்டங்களை சமாளித்து வருகிறார்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link