LIC Jeevan Akshay Plan: ஒரே பிரீமியம் செலுத்தி, மாதா மாதம் ரூ. 20,000 பெறலாம்

Tue, 29 Nov 2022-6:31 pm,

இதில் பயனாளி இறக்கும் வரை வருமானம் வந்து கொண்டே இருக்கும். ஜீவன் அக்ஷய் திட்டத்தில், எல்ஐசி உங்கள் பணத்திலிருந்து போதுமான வட்டியைப் பெற்ற பிறகு, உங்கள் முதலீட்டின் மூலம், ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு மாதாந்திர அல்லது மூன்று மாத அல்லது வருடாந்திர வருமானத்தை நீங்கள் பெற முடியும். 

நீங்கள் 30 முதல் 85 வயதுக்குட்பட்ட தனிநபராக இருந்தால், ஜீவன் அக்ஷய் பாலிசியை ஆன்லைனில் அல்லது ஆஃப்லைனில் வாங்கலாம். இந்தத் திட்டத்தில் குறைந்தபட்ச முதலீடு ரூ.1 லட்சம் ஆகும்.

கூட்டு முதலீட்டாளர்களும் ஜீவன் அக்ஷய் பாலிசியில் முதலீடு செய்யலாம். இருப்பினும், ஒவ்வொரு முதலீட்டாளரும் தனித்தனியாக ரூ.1 லட்சம் முதலீடு செய்ய வேண்டும். நீங்கள் தொகையை முதலீடு செய்தவுடன், உங்கள் மாதாந்திர ஓய்வூதியத்தை விரைவில் பெறத் தொடங்குவீர்கள் என்பதால், நீங்கள் அதிக நன்மை அடையலாம். நீங்கள் எவ்வளவு அதிகமாக முதலீடு செய்கிறீர்களோ, அவ்வளவு அதிக ஓய்வூதியம் கிடைக்கும்.

 

எல்ஐசி ஜீவன் அக்ஷய் பாலிசியில் 10 க்கும் மேற்பட்ட வருடாந்திர விருப்பங்களை வழங்குகிறது. பாலிசிதாரர் பாலிசி எடுக்கும் துவக்க நிலையிலேயே உத்தரவாதமான வருடாந்திர விகிதத்தைப் பெறுகிறார். நீங்கள் தேர்ந்தெடுக்கும் விருப்பத்தைப் பொறுத்து முதலீடுகளின் வருமானம் சற்று மாறுபடும்.

இந்த எடுத்துக்காட்டில், ஒரு முதலீட்டாளர் ஜீவன் அக்ஷய் பாலிசியில் ஒரே நேரத்தில் ரூ.9,16,200 டெபாசிட் செய்வதாக வைத்துக்கொள்வோம். முதலீடு தோராயமாக ரூ.9 லட்சம். முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடுகளின் வருமானமாக மாதத்திற்கு ரூ.6,859 பெறுவார்கள். அதேபோல், அவர்கள் ஆண்டுக்கு ரூ.86,265 அல்லது அரையாண்டு அடிப்படையில் ரூ.42,008 அல்லது காலாண்டு அடிப்படையில் ரூ.20,745 பெறுவார்கள். மாதம் ரூ.20,000 ஓய்வூதியம் பெற வேண்டுமானால், சுமார் ரூ.40 லட்சம் முதலீடு செய்ய வேண்டும்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link