குரு பெயர்ச்சியால் குபேர யோகம்.. 2024 இல் இந்த ராசிகளுக்கு பொற்காலம்

Thu, 14 Sep 2023-11:02 am,

குரு பெயர்ச்சி 2024: ஜோதிட சாஸ்திரத்தின்படி, ஒவ்வொரு கிரகப் பெயர்ச்சியின் தாக்கமும் அனைத்து ராசிக்காரர்களுக்கும் தெரியும். அதன்படி தற்போது குரு மேஷ ராசியில் உள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் மேஷம் உள்ளிட்ட வேறு சில ராசிக்காரர்களுக்கு இது நல்ல நேரம். 2024 ஆம் ஆண்டில், தேவகுரு வியாழன் மேஷ ராசியிலிருந்து வெளியேறி ரிஷப ராசிக்கு மாறுகிறார். ரிஷபம் உள்ளிட்ட பிற ராசிக்காரர்களுக்கு 2024-ம் ஆண்டு மிகவும் அதிர்ஷ்டகரமானதாக இருக்கும். அந்த ராசிகள் எவை என்று தெரிந்து கொள்வோம்.

மேஷ ராசி: தற்போது வியாழன் மேஷ ராசியில் உள்ளார். அடுத்த வருடம் குரு மேஷ ராசியிலிருந்து விலகி ரிஷபம் ராசிக்குள் நுழைகிறார். இதனால் பணவீட்டில் வியாழன் சஞ்சரிப்பதால், மேஷ ராசிக்காரர்களுக்கு செல்வச் செழிப்பு ஏற்படும். மேலும் தொழில், வியாபாரம் புதியதாக அமையும். மொத்தத்தில் அதிர்ஷ்டக் கதவுகளைத் திறப்பது போல் அமையும்.

ரிஷப ராசி: ரிஷபம் ராசியின் அதிபதியாக சுக்கிரன். 2024 ஆம் ஆண்டில் இந்த ராசியல் குருவின் பெயர்ச்சி மிகவும் அற்புதங்களைச் செய்யும். இவர்கள் எல்லாவிதமான மகிழ்ச்சியையும் பெறுவார்கள். இவர்களுக்கு வியாழன் சஞ்சாரத்தால் வருமானம் அதிகரிக்கும். சமூகத்தில் மரியாதை பெறுவீர்கள். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். திருமண வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும்.

கடக ராசி: குரு ராசி மாற்றம் கடக ராசிக்காரர்களுக்கு மிகவும் நல்ல காலத்தை கொண்டு வரப்போகிறது. வருமானம் உயரும் வாய்ப்புகள் உண்டு. வேலை கிடைக்க வாய்ப்பு உண்டு. பணத்தை சேமிப்பதில் வெற்றி கிடைக்கும். காதல் வாழ்க்கையில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். முதலீட்டில் லாபம் அடைவீர்கள். புதிய வேலை வாய்ப்புகள் அமையும்.

கன்னி ராசி: 2024 ஆம் ஆண்டில் ரிஷப ராசியில் குரு பெயர்ச்சி அடைவது கன்னி ராசிக்காரர்களுக்கு பல நன்மைகள் உண்டாகும். தொழிலில் வெற்றி கிடைக்கும். தடங்கலான காரியங்கள் நடக்க ஆரம்பிக்கும். திருமண வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும். புதிய வேலை வாய்ப்பு கிடைக்கலாம். வணிகர்கள் பெரிய ஆர்டர்களைப் பெறலாம். மரியாதை கூடும்.

விருச்சிக ராசி: குரு பெயர்ச்சியால் விருச்சிக ராசிக்காரர்களுக்கு 2024ஆம் ஆண்டு அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது. திருமணமானவர்கள் மகிழ்ச்சியையும் நல்ல அதிர்ஷ்டத்தையும் அடைவார்கள். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். வியாபாரிகளுக்கு லாபம் கிடைக்கும். இந்த காலகட்டத்தில் நீங்கள் நிறைய பணம் சம்பாதிக்கலாம்.

பொருப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தூள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link