தனுசு ராசியில் புத-ஆதித்ய யோகம்... வாழ்க்கையில் உச்சத்தை தொடப்போகும் 5 ராசிகள்!

Fri, 05 Jan 2024-4:09 pm,

புதன் சஞ்சாரத்தால் தனுசு ராசியில் உருவாகும்பு தாதித்ய ராஜயோகத்தின் தாக்கத்தால், மேஷம், மிதுனம் உள்ளிட்ட 5 ராசிக்காரர்கள் அதிக பலன்களைப் பெறுவார்கள். குறிப்பிட்ட சில ராசிகள், இதனால், பணப் பலன்களை அதிகம் பெறுவார்கள். இந்த நேரத்தில் உங்களுக்கு புதிய வேலை கிடைக்கலாம். வாழ்க்கையில் அனைத்து வகையிலும் வெற்றிகளை குவித்து, மகிழ்ச்சியாக இருப்பார்கள்.

தனுசு ராசிக்காரர்களுக்கு புதன் சஞ்சாரம் வருமானத்தை அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது. புதனின் சஞ்சாரம் திருமணமானவர்களின் வாழ்வில் காதல் மகிழ்ச்சியை அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது. இந்த நேரத்தில் தொழில் ரீதியாக எங்கிருந்தோ சில நல்ல செய்திகளைப் பெறலாம். உங்கள் ராசிக்காரர்களுக்கு இந்த நேரத்தில் திடீரென்று பணப் பட்டுவாடா கிடைக்கும், தடைபட்ட உங்களின் பல வேலைகள் சீராகும்.

மேஷ ராசிக்காரர்கள் புதன் பெயர்ச்சியின் சுப பலன்களால், தங்கள் வாழ்வில் சாதகமான பலன்களைப் பெறத் தொடங்குவார்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் வெற்றி பெறுவீர்கள். சமீபத்தில் புதிதாக தொழில் துவங்கியவர்களின் பணி சீராகும். நண்பர்களின் உதவியால் சில பெரிய வெற்றிகளைப் பெறுவீர்கள். கல்விப் போட்டியிலும் எதிர்பார்த்த வெற்றியைப் பெறுவீர்கள். ஆன்மிகத்தில் உங்கள் நாட்டம் அதிகரிக்கும் மற்றும் ஒவ்வொரு வேலையிலும் உங்கள் விருப்பப்படி பலன் கிடைக்கும்.

 

மிதுன ராசிக்காரர்கள் புத்தாதித்ய ராஜயோகத்தின் சுப பலன்களால் பணப் பலன்களைப் பெறுவார்கள், வியாபாரத்தில் எதிர்பார்த்த வெற்றியைப் பெறுவார்கள். திருமணமானவர்கள் தங்கள் துணையுடன் வலுவான உறவைக் கொண்டிருப்பார்கள். உங்களைப் பொறுத்தவரை, இந்த காலம் உங்கள் வாழ்க்கையில் சிறப்பான வெற்றியை அளிப்பதாகக் கருதப்படுகிறது மற்றும் மகிழ்ச்சி உங்கள் வீட்டிற்குள் நுழையும். மிதுன ராசிக்காரர்கள் தங்கள் துணைக்கு விலையுயர்ந்த பரிசையும் வாங்கலாம்.

சிம்ம ராசிக்காரர்கள் புதன் சஞ்சாரத்தின் சுப பலன்களால், கல்விப் போட்டித் துறையில் ஆதாயம் அடைவதோடு, பண முதலீட்டில் சிறப்பான லாபத்தைப் பெறுவீர்கள். பங்குகளில் வேலை செய்பவர்களுக்கு இந்த நேரம் சாதகமாக இருக்கும் மற்றும் உங்கள் செல்வம் அதிகரிக்கும். புதன் சஞ்சாரத்தின் தாக்கத்தால் உங்களின் அறிவு பெருகும், முன்பை விட தன்னம்பிக்கை கூடும். மாணவர்கள் இதற்கிடையில் நிறைய கற்றுக் கொள்வார்கள்.

கன்னி ராசிக்காரர்களுக்கு புதன் ராசி அதிபதியாகவும், ராசி அதிபதி சுப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதும் இந்த ராசிக்காரர்களின் வாழ்வில் மகிழ்ச்சியையும், வளத்தையும் பெருக்குவதாகக் கருதப்படுகிறது. எனினும், தேவையில்லாமல் செலவழிக்காதீர்கள். உங்கள் பணத்தை எதிர்காலத்திற்காக சேமிக்கவும். இந்த காலகட்டத்தில் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் விரும்பிய வெற்றியைப் பெறுவீர்கள். மேலும் மருத்துவர் அல்லது வழக்கறிஞர் தொழிலுடன் தொடர்புடையவர்களுக்கு வெற்றிகரமான காலமாக இருக்கும்.

 

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link