1 லட்சம் பத்திரிகை, 40 ஏக்கர் திடல், 500 கோடி செலவில் நடந்த `ஒஹோ` திருமணம்!

Fri, 06 Mar 2020-2:44 pm,

1 லட்சம் பத்திரிகை.... 40 ஏக்கருக்கு திடல்.... 500 கோடி செலவில் நடந்த திருமண திருவிழா...!

கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சராக இருக்கும் ஸ்ரீராமுலு தன்னுடைய மகள் திருமணத்தை, சுமார் 500 கோடி ரூபாய் செலவில் நடத்தி வருவது தான் தற்போதைய அரசியல் வட்டாரத்தின் ஹாட் டாபிக். இவரது மகள் ரக்ஷிதாவிற்கும், ஹைதராபாத்தை சேர்ந்த தொழிலதிபர் ரவிக்குமார் என்பவருக்கும் நேற்று திருமணம் நடைபெறது.

2016 ஆம் ஆண்டு ரெட்டி சகோதரர்களில் ஒருவரும் மற்றும் சட்டவிரோத குவாரி தொழிலில் குற்றச்சாட்டில் சிக்கியுள்ளவர்களில் முக்கியமானவர்களில் ஒருவருமான, ஜனார்த்தன ரெட்டியின் மகளுக்கு திருமணம் நடைபெற்றது. அந்த திருமணத்திற்கு 500 கோடி ரூபாய் வாரி இறைக்கப்பட்டது, என்று அப்போது சர்ச்சை ஏற்பட்டு இருந்தது.

திருமணம் பெங்களூரில் உள்ள பேலஸ் கிரவுண்டில் படு விமரிசையாக நடைபெற்றது! 

சுமார் 1 லட்சம் விருந்தினர்கள் இந்த திருமண விழாவில் கலந்து கொள்வார்கள் என்பதால் கோடிக்கணக்கான ரூபாய் செலவில் பிரபல கோயில்களின் மாதிரியில் பேலஸ் கிரவுண்டில் செட் அமைத்துள்ளனர். 

மணப்பெண்ணின் காஸ்டியூம் டிசைனர், சானியா சர்தாரியா என்று பிக்ஸ் செய்யப்பட்டுள்ளது. பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் திருமணத்தின்போது மேக்கப் பணிகளில் ஈடுபட்ட ஆர்ட்டிஸ்டுகள், ஸ்ரீராமுலு மகளுக்கும் மேக்கப் செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளனர். 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link