ரஞ்சி அணியில் இருந்து முக்கிய வீரர் நீக்கம்! அதுவும் இந்த காரணங்களுக்காகவா?

Wed, 23 Oct 2024-9:31 am,

தற்போது நடைபெற்று கொண்டு இருக்கும் ரஞ்சி டிராபி போட்டிகளுக்கான மும்பை அணியில் இருந்து பிரித்வி ஷா நீக்கப்பட்டுள்ளார். கிரிக்கெட் வாழ்க்கையில் தொடர்ந்து சரிவை சந்தித்து வரும் பிரித்வி ஷாவிற்கு இது மேலும் பின்னடைவைக ஏற்படுத்தி உள்ளது.

 

இந்திய அணியில் ஓப்பனிங் வீரராக இருந்த ஷா கடந்த சில ஆண்டுகளாக ஃபார்மில் இல்லாமல் இருந்து வருகிறார். இதன் காரணமாக மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்கம் அவரை அணியில் இருந்து நீக்கியுள்ளது.

 

மேலும் பயிற்சி போட்டிகளில் ஈடுபடாமல் இருப்பது, முறையான கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபடாதது போன்ற சர்ச்சைகளிலும் சிக்கி உள்ளார்.

 

பிரித்வி ஷாவின் உடற்தகுதி குறித்தும் நிர்வாகம் கவலையில் உள்ளது. இதனால் சில கடினமாக முடிவுகளை தற்போது எடுத்துள்ளனர்.

 

மும்பை அணியில் ஷாவை எடுப்பதற்கு கேப்டன் அஜிங்க்யா ரஹானே எதிர்ப்பு தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அவரை அணியில் இருந்து நீக்கியுள்ள நிலையில் இன்ஸ்டாவில் மும்பை நிர்வாகத்தை கலாய்க்கும் விதமாக பதிவிட்டுள்ளார்.

 

இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், "ஒரு இடைவெளி தேவை, நன்றி" என்று பதிவிட்டுள்ளார். மேலே குறிப்பிட்ட காரணங்கள் எதுவும் அதிகார்வப்பூர்வமாக MCA தெரிவிக்கவில்லை.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link