சுகர் லெவலை சுலபமா குறைக்க உதவும் சூப்பர் உணவுகள்: கண்டிப்பா சாப்பிடுங்க

Tue, 10 Sep 2024-10:31 am,

நாம் அன்றாடம் உட்கொள்ளும் உணவின் துணைகொண்டே நீரிழிவு நோயை பெரிய அளவில் கட்டுக்குள் வைக்கலாம். இரத்த சர்க்கரை அளவு அதிகமாவதற்கு நாம் உட்கொள்ளும் உணவு மிக முக்கிய காரணம் என்பதால், சுகர் நோயாளிகள் தங்கள் டயட்டில் அதிகப்படியான கவனம் செலுத்த வேண்டும். நீரிழிவு நோயை கட்டுக்குள் கொண்டுவர உதவும் சில எளிய வீட்டு வைத்தியங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.

பாலக்கீரை, வெந்தயக்கீரை போன்ற கீரை வகைகள், பச்சை இலை காய்கறிகள் ஆகியவை நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்றவையாக கருதப்படுகின்றன. இவற்றில் கலோரிகளும், கார்போஹைட்ரேட்ஸும் மிகவும் குறைவாக இருப்பதால் இரத்த சர்க்கரை அளவை நிர்வகிப்பதில் பெரிய அளவில் இவை உதவுகின்றன. இவை செரிமானத்தை சீராக்கி, இரத்த ஓட்டத்தையும் மேம்படுத்துகின்றன. 

இலவங்கப்பட்டை இன்சுலின் சென்சிடிவிட்டியை மேம்படுத்தும் மிகவும் சிறப்பான ஒரு மசாலாவாக கருதப்படுகின்றது. இதை உணவில் சேர்ப்பதால் உணவின் சுவை அதிகரிப்பதோடு இரத்த சர்க்கரை அளவும் கட்டுக்குள் இருக்கும். சுகர் நோயாளிகள் அவ்வப்போது இலவங்கப்பட்டையை தங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். சுகர் லெவலை கட்டுப்படுத்துவதுடன், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், உடல் எடையை கட்டுப்படுத்தவும் இது உதவும்.

சியா விதைகளில் கொழுப்பு அமிலங்கள் மற்றும் நார்ச்சத்து அதிகமாக உள்ளன. நீரிழிவு நோயை கட்டுப்படுத்த நீரிழிவு நோயாளிகள் சியா விதைகளை தினமும் உட்கொள்ளலாம். இவை இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்து ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுகின்றன.

முழு தானியங்கள்: பார்லி, ஓட்ஸ், திணை வகைகள் போன்ற முழு தானியங்கள் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுகின்றன. இது மட்டுமின்றி இவற்றால் கூடுதல் கலோரிகள் வேகமாக எரிக்கப்படுகின்றன. இவை உடலில் கரோரிகளை சேர்க்காமல் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகளை அளிக்கின்றன. முழு தானியங்களால் எடை இழப்பிலும் பெரிய அளவில் உதவி கிடைக்கின்றது. 

பாதாம், அக்ரூட் பருப்புகள் போன்றவற்றில் ஆரோக்கியமான கொழுப்புகள், புரதச்சத்து மற்றும் நார்ச்சத்து ஆகியவை உள்ளன. இவை சுகர் நோயாளிகளுக்கு போதுமான ஆற்றலை அளிக்கின்றன. இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க இவை பெரிய அளவில் உதவுகின்றன

ப்ளூபெர்ரி, ஸ்ட்ராபெர்ரி, ராஸ்ப்பெர்ரி போன்ற பெர்ரி வகை பழங்களில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. இவற்றை உட்கொள்வதன் மூலம் நீரிழிவு நோயாளிகள் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கலாம். உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி இவற்றின் மூலம் கிடைக்கின்றது. இவை நாள் முழுதும் உடலை புத்துணர்ச்சியுடன் இருக்க வைக்கின்றது.

கார்போஹைட்ரேட்ஸ் குறைவாகவும் புரதச்சத்து அதிகமாகவும் உள்ள தயிர், இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கும் ஒரு சிறந்த உணவாக கருதப்படுகின்றது. நீரிழிவு நோயாளிகள் காலை உணவோடு ஒரு கப் தயிர் உட்கொள்ளலாம். இது நாள் முழுவதும் அவர்களது இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைப்பதோடு உடலுக்கு தேவையான புத்துணர்ச்சியையும் அளிக்கின்றது.

ஆரோக்கியமான கொழுப்புகள், நார்ச்சத்து, வைட்டமின்கள் ஆகியவை அதிக அளவில் நிறைந்துள்ள பழமான அவகேடோ இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுகின்றது. இது மட்டுமின்றி இது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவியாக இருக்கும்.

பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link