ஏப்ரல் முதல் நடைமுறைக்கு வரும் New PF tax rules, உங்களை எவ்வாறு பாதிக்கும்?

Mon, 22 Feb 2021-7:13 am,

மாதந்தோறும் ஊழியரின் அடிப்படை சம்பளத்தில் 12% கழிக்கப்படுகிறது. ஒவ்வொரு மாதமும், ஒரு ஊழியரின் அடிப்படை சம்பளம் மற்றும் செயல்திறன் ஊதியங்களில் குறைந்தது 12% வருங்கால வைப்பு நிதியின் வடிவத்தில் கட்டாயமாகக் கழிக்கப்படும். அத்துடன், பணி வழங்கும் முதலாளி தனது பங்கிலிருந்து 12% சேர்க்கிறார். இந்த வரிவிதிப்பு மூலம், அதிக வருமானம் ஈட்டுபவர்களை தங்கள் பி.எஃப் கணக்குகளுக்கு அதிக பங்களிப்பு செய்வதிலிருந்து தடுக்க அரசாங்கம் விரும்புகிறது.

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையில் இந்த அறிவிப்பை வெளியிட்டார்  

 

"உயர் வருமானம் ஈட்டும் ஊழியர்கள் ஈட்டும் வருமானத்திற்கான வரி விலக்குகளை மாற்றியமைப்பதற்காக, பல்வேறு வருங்கால வைப்பு நிதிகளுக்கு ஊழியர்களின் பங்களிப்பின் மூலம் கிடைக்கும் வருமான வட்டிக்கு 2.5 லட்சம் ரூபாய் வரி விலக்கு வரம்பு நிர்ணயிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதிக வருமானம் ஈட்டுபவர்களைத் தவிர, அடிப்படை ஊதியத்தில் கட்டாய 12 சதவீதத்திற்கு மேல் பணத்தை முதலீடு செய்பவர்களுக்கும் பாதிப்பு ஏற்படும். அதாவது, தன்னார்வ வருங்கால வைப்பு நிதி (Voluntary Provident Fund (VPF)) என்ற வடிவில் சேமிக்கும் சம்பள ஊழியர்களும் இதன் மூலம் பாதிக்கப்படுவார்கள். திரும்பப் பெறுவதற்கு வரி விதிக்கப்படாத ஒரு பெரிய வரி இல்லாத வட்டி வருமானம் இப்போது கட்டுப்படுத்தப்படுகிறது. இது பெரும்பாலும் அதிக வருவாய் பெறுபவர்களை பாதிக்கும்.

வரிவிதிப்பு விவரங்கள் என்ன, எவ்வளவு என்பதை நிதியமைச்சகம் இன்னமும் தெளிவுபடுத்தவில்லை. எனவே, இதற்கான கணக்கிடும் முறை பின்னர் அறிவிக்கப்படும்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link